இளம் பத்திரிக்கையாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை : தி இந்து நாளிதழின் செய்தியாளர் சவுந்தர்ய ப்ரீத்தா பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு ஊடகங்களில் பணிபுரியும் இளம் பத்திரிக்கையாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை மாதந்தோறும் இரண்டு மற்றும் நான்காவது ஞாயிறன்று நடைபெறுகிறது. அதன்படி, இரண்டாவது நிகழ்வாக இன்று பயிற்சிப் பட்டறை துவங்கியது.  இந்த நிக்ழவில் "தி இந்து" நாளிதழின் செய்தியாளர் சவுந்தரிய ப்ரீதா சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்டார்.  'ஊடகவியலாளர் நெறிமுறைகள் மற்றும் தொழில் துறை சார்ந்த செய்தி சேகரிப்பு' என்ற தலைப்பில் இளம் பத்திரிக்கையாளர்களிடையே உரையாற்றினார்.  அப்போது அவர் பேசியதாவது:- 



இன்றைய காலகட்டத்தில் பலர் தொழில்துறை சார்ந்த செய்திகளை படிப்பதில்லை. ஊடகவியலாளர்களிடையேயும் தொழில் துறை சார்ந்த செய்தி சேகரிப்பில் சில தயக்கம் தெரிகிறது. கோவை மாநகரம் முழுக்க முழுக்க தொழில் துறை சார்ந்த நகரம். இத்துறை சார்பில் செய்தியாளர்கள் எழுதும் ஒவ்வொரு செய்தியும் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாது மாவட்டத்தில் வருவாயையும் அதிகரிக்கச் செய்யும். 

தொழில் துறை தொடர்பான செய்திகளை மக்களிடம் கொண்டு செல்லும் போது அவர்களுடைய பிரச்சனைகளினூடே அச்செய்தியை கொடுக்க வேண்டும். அதோடு, சாதக மற்றும் பாதகங்களையும் மிக எளிமையான நடையில் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.



தற்போது, கோவையில் உள்ள ஒவ்வொரு தனியார் நிறுவனமும், புதிதாக தொடங்கும் ஒவ்வொரு நிறுவனத்திலும் தங்கள் பங்குகளை முதலீடு செய்கிறார்கள். இது தவிர பல்வேறு புதிய தொழிற்சாலைகள் கோவையில் தொடங்கபட்டு வருகிறது. இதனால் பலர் வேலைவாய்ப்பை பெருகின்றனர். எனவே, இது முழுக்க முழுக்க மக்கள் சார்ந்த செய்திக்களமாக உள்ளது. இளம் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் தொழில் துறை சார்ந்த செய்தி சேகரிப்பு முறையை கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வப்போது, மூத்த பத்திரிக்கையாளர் அல்லது வல்லுனர்கள் அலோசனைகளை கேட்டறிந்து செய்தி சேகரித்தால் உள்ளூர் செய்தி ஒன்றையும் தேசிய செய்தியாக்க முடியும். 

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தின் செயலாளர் ஷாதிக் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப்பரிசை வழங்கி கவுரவித்தார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...