கோவையில் பாஜக அலுவலக ஊழியர் மீது தாக்குதல் - 9 பேர் கைது

கோவை பனைமரத்தூரை சேர்ந்த தென்னரசு, பாஜக அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். பனைமரத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பது குறித்து போலீசாருக்கு தென்னரசு தகவல் அளித்ததாக கருதி, அவரை தாக்கிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையில் கஞ்சா விற்பனை குறித்து தகவல் அளித்ததாக ஒருவரை தாக்கிய 9பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை பனைமரத்தூர் மாரியம்மன்கோவில் வீதியை சேர்ந்தவர் தென்னரசு (48). இவர் கோவை பாஜக அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள், அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.

இது குறித்து தென்னரசு போலீசாரிடம் கூறியதாக எண்ணி, அப்பகுதி இளைஞர்கள் தென்னரசுவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவரை தாக்கியதோடு, அவரின் வீட்டின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதையடுத்து அவர் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.



புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், பனைமரத்தூரை சேர்ந்த அரவிந்த் (21), சதீஸ்குமார் (20), விஜயகுமார் (19), பத்மா (53), அம்பிகா (45), ரோகினி (41), நந்தினி (42) உட்பட 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் புகார் அளித்துள்ள தென்னரசு மீது 13 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...