கோவையில் பாஜக அலுவலக ஊழியர் மீது தாக்குதல் - 9 பேர் கைது

கோவை பனைமரத்தூரை சேர்ந்த தென்னரசு, பாஜக அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். பனைமரத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பது குறித்து போலீசாருக்கு தென்னரசு தகவல் அளித்ததாக கருதி, அவரை தாக்கிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையில் கஞ்சா விற்பனை குறித்து தகவல் அளித்ததாக ஒருவரை தாக்கிய 9பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை பனைமரத்தூர் மாரியம்மன்கோவில் வீதியை சேர்ந்தவர் தென்னரசு (48). இவர் கோவை பாஜக அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள், அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.

இது குறித்து தென்னரசு போலீசாரிடம் கூறியதாக எண்ணி, அப்பகுதி இளைஞர்கள் தென்னரசுவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவரை தாக்கியதோடு, அவரின் வீட்டின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதையடுத்து அவர் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.



புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், பனைமரத்தூரை சேர்ந்த அரவிந்த் (21), சதீஸ்குமார் (20), விஜயகுமார் (19), பத்மா (53), அம்பிகா (45), ரோகினி (41), நந்தினி (42) உட்பட 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் புகார் அளித்துள்ள தென்னரசு மீது 13 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...