தாராபுரம் அருகே காரில் 45 கிலோ கஞ்சா கடத்திய இளைஞர் கைது!

திருப்பூர் அருகே தாராபுரம் காரில் 5.50 லட்சம் மதிப்புள்ள 45 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த வாழப்பாடியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் கைது செய்யப்பட்டார். மதுவிலக்கு போலீசார் நடத்திய வாகன சோதனையில் அவர் சிக்கினார்.


கோவை: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மதுவிலக்கு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது டாடா இன்டிகா என்ற வாகனத்தில் வந்த நபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.

அப்போது அவர் முன்னுக்கு பின்னாக பதில் அளித்தார். இதனால், மேலும் சந்தேகம் அடைந்த மதுவிலக்கு காவல்துறையினர், அவரை மதுவிலக்கு காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.



அப்போது அவர், காரில் சுமார் 45 கிலோ அளவுள்ள 5.50 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. கஞ்சாவை மொத்தமாக வாங்கி விற்பனைக்காக இவர் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பிடிபட்ட நபர், வாழப்பாடியைச் சேர்ந்த சேகர் மகன் தமிழ்ச்செல்வன் ஆவார். இதையடுத்து, அவரிடமிருந்து டாட்டா இன்டிகா கார் மற்றும் 45 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து காவல்துறையினர் தமிழ்ச்செல்வனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...