தாராபுரம் அருகே காரில் 45 கிலோ கஞ்சா கடத்திய இளைஞர் கைது!

திருப்பூர் அருகே தாராபுரம் காரில் 5.50 லட்சம் மதிப்புள்ள 45 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த வாழப்பாடியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் கைது செய்யப்பட்டார். மதுவிலக்கு போலீசார் நடத்திய வாகன சோதனையில் அவர் சிக்கினார்.


கோவை: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மதுவிலக்கு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது டாடா இன்டிகா என்ற வாகனத்தில் வந்த நபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.

அப்போது அவர் முன்னுக்கு பின்னாக பதில் அளித்தார். இதனால், மேலும் சந்தேகம் அடைந்த மதுவிலக்கு காவல்துறையினர், அவரை மதுவிலக்கு காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.



அப்போது அவர், காரில் சுமார் 45 கிலோ அளவுள்ள 5.50 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. கஞ்சாவை மொத்தமாக வாங்கி விற்பனைக்காக இவர் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பிடிபட்ட நபர், வாழப்பாடியைச் சேர்ந்த சேகர் மகன் தமிழ்ச்செல்வன் ஆவார். இதையடுத்து, அவரிடமிருந்து டாட்டா இன்டிகா கார் மற்றும் 45 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து காவல்துறையினர் தமிழ்ச்செல்வனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...