தர்பூசணி விளைச்சல் பாதிப்பு - உடுமலை விவசாயிகள் கவலை!

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக வெயில் காரணமாக இந்த சீசனில் தர்பூசணி விளைச்சல் குறைந்துள்ளது. கொள்முதல் விலையும் சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் சுற்றுப்பகுதியில், கோடை சீசனை இலக்காக வைத்து கிணற்று பாசனத்தில், தர்பூசணி பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.

குறிப்பாக, மேட்டுப்பாத்தியில், நீர் ஆவியாவதை தடுக்க நிலப்போர்வை அமைத்து, விதைகளை நடவு செய்கின்றனர்.



செடிகளின் அருகிலேயே தண்ணீர் கிடைக்கும் வகையில், நுண்ணீர் பாசன முறையை பின்பற்றுகின்றனர். இதனால், ஏக்கருக்கு 20 டன் வரை தர்பூசணி விளைச்சல் கிடைத்துவருகிறது.

கொரோனா ஊரடங்கு காலத்தில், கொள்முதல் செய்ய ஆளில்லாமல், தர்பூசணி விளைநிலங்களிலேயே வீணாகி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. நடப்பு சீசனில் தாந்தோணி, துங்காவி மற்றும் உடுமலை வட்டாரத்தில், சில பகுதிகளிலும் தர்பூசணி சாகுபடி செய்து அறுவடை தொடங்கியுள்ளது.



இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'தற்போது, தர்பூசணியை கிலோ, 12 – 14 ரூபாய் வரை கொள்முதல் செய்கின்றனர். இந்த விலை கட்டுப்படியாகாது. அதிக வெயில் உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆண்டு 2 டன் வரை விளைச்சல் குறைந்துவிட்டது. சாகுபடி செலவு அதிகரித்து நிலையில், விலை அதிகரித்தால் மட்டுமே நஷ்டத்தை தவிர்க்க முடியும், என்றனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...