கோவையில் அரசு பொருட்காட்சி - ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

கோவையில் 45 நாட்களுக்கு அரசு பொருட்காட்சி நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


கோவை: கோவையில் 45 நாட்களுக்கு நடைபெறவுள்ள அரசு பொருட்காட்சி நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவையில் 45 நாட்களுக்கு அரசு பொருட்காட்சி நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், இந்தாண்டு அரசு பொருட்காட்சி கோவை மாநகராட்சி சிறை சாலை அணிவகுப்பு மைதானத்தில் ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்கப்பட்டு 45 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது.

இந்தப் பொருட்காட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை, வருவாய்த்துறை, சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, வனத்துறை உட்பட 27 அரசு துறைகளுக்கு தங்கள் துறையின் மூலம் செலுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வண்ணம் அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.

மேலும், தமிழ்நாடு மின்சாரம் வாரியம் கோவை மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட 7 அரசு சார்பு நிறுவனங்களும் இப்பொருட்காட்சியில் கண்காட்சி அரங்குகளை அமைக்க உள்ளது. இப்பொரு காட்சியில் சிறப்பாக அரங்குகள் அமைக்கும் துறைகளின் அரங்குகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் வழங்க உள்ளனர், என்றார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...