20 ஆண்டு காவல் பணி நிறைவு செய்த பெண் காவலர் - நற்சான்றிதழ் வழங்கி கவுரவிப்பு!

20 ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றி தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கம் பெற்ற பெண் காவலர் பூங்கொடிக்கு, தமிழக அரசால் வழங்கப்படும் நற்பணி சான்றிதழை கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார் வழங்கி பாராட்டினார்.


கோவை: காவல்துறையில் 20 ஆண்டுகள் பணியாற்றிய பெண் காவலருக்கு கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

கோவை சரக பணியிடை பயிற்சி மையத்தில் பணிபுரிந்து வருபவர் பெண் காவலர் பூங்கொடி. இவருக்கு கடந்த ஜனவரி 26ல் சென்னையில் குடியரசு தின அணிவகுப்பின் போது, 20 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும், “தமிழக முதலமைச்சர் காவல் பதக்கம்” வழங்கப்பட்டது.

இந்நிலையில், பெண் காவலர் பூங்கொடிக்கு தமிழக அரசால் வழங்கப்படும் நற்பணி சான்றிதழ், கோவை சரக காவல்துறை அலுவலகத்தில் இன்று வழங்கப்பட்டது. இந்த சான்றிதழை கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார் நேரில் வழங்கி அவரை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...