20 ஆண்டு காவல் பணி நிறைவு செய்த பெண் காவலர் - நற்சான்றிதழ் வழங்கி கவுரவிப்பு!

20 ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றி தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கம் பெற்ற பெண் காவலர் பூங்கொடிக்கு, தமிழக அரசால் வழங்கப்படும் நற்பணி சான்றிதழை கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார் வழங்கி பாராட்டினார்.


கோவை: காவல்துறையில் 20 ஆண்டுகள் பணியாற்றிய பெண் காவலருக்கு கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

கோவை சரக பணியிடை பயிற்சி மையத்தில் பணிபுரிந்து வருபவர் பெண் காவலர் பூங்கொடி. இவருக்கு கடந்த ஜனவரி 26ல் சென்னையில் குடியரசு தின அணிவகுப்பின் போது, 20 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும், “தமிழக முதலமைச்சர் காவல் பதக்கம்” வழங்கப்பட்டது.

இந்நிலையில், பெண் காவலர் பூங்கொடிக்கு தமிழக அரசால் வழங்கப்படும் நற்பணி சான்றிதழ், கோவை சரக காவல்துறை அலுவலகத்தில் இன்று வழங்கப்பட்டது. இந்த சான்றிதழை கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார் நேரில் வழங்கி அவரை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...