தாராபுரத்தில் திமுக சார்பில் இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி - அமைச்சர் சாமிநாதன் பங்கேற்பு!

தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 17வது வார்டு பகுதியில் திமுக சார்பில், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில், அனைத்து சமூகத்தினரும் கலந்து கொள்ளும் மத நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் வகையில் இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


திருப்பூர்: தாராபுரத்தில் திமுக சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள 17 வது வார்டு பகுதியில் திமுக சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சியானது, ரமலான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து சமூகத்தினரும் கலந்து கொள்ளும் மத நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் வகையில் நடைபெற்றது.



இதில் தமிழ்நாடு திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பத்மநாபன், திமுக நகரக் கழக செயலாளர் முருகானந்தம், நகர் மன்ற தலைவர் பொறியாளர் பாப்பு கண்ணன், அவைத்தலைவர் கதிரவன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் மற்றும் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...