தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 17வது வார்டு பகுதியில் திமுக சார்பில், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில், அனைத்து சமூகத்தினரும் கலந்து கொள்ளும் மத நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் வகையில் இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பூர்: தாராபுரத்தில் திமுக சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள 17 வது வார்டு பகுதியில் திமுக சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சியானது, ரமலான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து சமூகத்தினரும் கலந்து கொள்ளும் மத நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் வகையில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பத்மநாபன், திமுக நகரக் கழக செயலாளர் முருகானந்தம், நகர் மன்ற தலைவர் பொறியாளர் பாப்பு கண்ணன், அவைத்தலைவர் கதிரவன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் மற்றும் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள 17 வது வார்டு பகுதியில் திமுக சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சியானது, ரமலான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து சமூகத்தினரும் கலந்து கொள்ளும் மத நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் வகையில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பத்மநாபன், திமுக நகரக் கழக செயலாளர் முருகானந்தம், நகர் மன்ற தலைவர் பொறியாளர் பாப்பு கண்ணன், அவைத்தலைவர் கதிரவன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் மற்றும் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.