கல்லூரியில் இருந்து என்னை யாரும் காதலிக்க வில்லை..! - கோவையில் நடிகர் விக்ரம் கலகலப்பான பேச்சு!

ஆதித்யா வர்மாவில் காதல் தோல்வியால் பாருக்கு போனான். இவன் காதல் தோல்வியால் வாருக்கு போனான். நான் ஒரிஜினல் சூப்(பர்) பாய், கல்லூரியில் இருந்தே தன்னை யாரும் காதலித்தது கிடையாது என்று கோவையில் நடந்த பிஎஸ்-2 புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் தெரிவித்தார்.


கோவை சரவணம்பட்டி ப்ரோசோன் தனியார் மாலில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் திரைப்பட இரண்டாம் பாகத்தின் விளம்பர நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய விக்ரம், மேடையில் அருள் படத்தின் பாடலை ரசிகர் மத்தியில் பாடி பேச்சை தொடங்கினார்.



அப்போது விக்ரம் பேசியதாவது:

நான் பேச நினைத்ததை எல்லாம் திரிஷா பேசிவிட்டார். ரசிகர்களை பார்த்து I LOVE YOU, நாங்கள் அனைவரும் உங்களை காதலிக்கிறோம். படங்களுக்கு படம் உடலை மாற்றிக் கொண்டே இருப்பேன். மஜா திரைப்பட சூட்டிங் பொள்ளாச்சியில் நடைபெற்றது, அப்போது ஜாலியாக இருந்தது.

சாப்பிட்ட சாப்பாடு இன்றுவரை உடம்பில் உள்ளது. நீங்கள் அழகாக தமிழ் பேசுகிறீர்கள். அந்நியன் திரைப்படத்தில் வரும் குரலில் பேசினதை நினைத்தாலே சிரிப்புதான் வருகிறது.

பொன்னியின் செல்வன் மிகப் பெரிய வெற்றியை அடைந்தது. இது எங்க படம் என்பதைத்தாண்டி, இது உங்க படம் என ஏற்றுக் கொண்டீர்கள். பிஎஸ் 2 படம் வெளியான பிறகு கோவையில் ஓடின அளவுக்கு வேறு எங்கும் ஓடவில்லை என கேள்விப்பட வேண்டும்.

இந்த படத்தின்போது தன்னுடன் நடித்த சக நடிகர்களுடன் அனைத்தையும் சந்தோசமாக பகிர்ந்து கொண்டோம். இந்த படம் ப்ரோமோஷனுக்காக செலவழித்த நேரம் அதிகம். இத்தனை நடிகர்கள்கூட நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. அனைத்து நடிகர்களும் இதில் ஒன்றாக இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இவ்வாறு, விக்ரம் தெரிவித்தார். அப்போது, ரசிகர்கள் தங்கலான் திரைப்படம் குறித்து அப்டேட் கேட்டு முழக்கங்களை எழுப்பினர். அதற்கு பதில் அளித்த விக்ரம், அந்த திரைப்பட புரமோஷனின்போது அதனைப்பற்றி பேசி கொள்ளலாம் என்றும், அந்த சூட்டிங்கில் இருந்துதான் வந்துள்ளேன் என்றும் தெரிவித்தார். மேலும், படத்தின் இயக்குநர் ரஞ்சித் உங்களிடம் ஹாய் சொல்ல சொன்னதாகவும் ரசிகர்களிடம் விக்ரம் தெரிவித்தார்.

ஆதித்யா வர்மாவில் காதல் தோல்வியால் பாருக்கு போனான், இவன் காதல் தோல்வியால் வாருக்கு போனான், நான் ஒரிஜினல் சூப்(பர்) பாய், கல்லூரியில் இருந்தே தன்னை யாரும் காதலித்தது கிடையாது என்றும் நடிகர் விக்ரம் அப்போது கூறினார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...