கோவையில் ஆர்.எஸ்.எஸ் பேரணி - ஹெச்.ராஜா, அர்ஜூன்சம்பத் பங்கேற்பு!

கோவையில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் சீருடை பேரணியில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன்சம்பத் உட்பட ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர், பாஜக, இந்து முன்னனி, இந்து மக்கள் கட்சி என சங்பரிவார் அமைப்பை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


கோவை: நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, கோவையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சீருடை பேரணி நடைபெற்றது.

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து.



கோவையில் இன்று மாலை மாபெரும் பேரணி நடைபெற்றது.

சத்ரபதி வீரசிவாஜியின் 350ஆவது முடிசூட்டிய விழா, அம்பேத்கர் பிறந்தநாள் விழா, வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழா என முப்பெரும் விழாவாக நடத்தப்பட்ட பேரணியில் பா.ஜ.க மூத்த தலைவர் எச். ராஜாவும், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ஆகியோர் கலந்துகொண்டு சீருடை அணிந்து ஊர்வலமாக சென்றனர்.



கோவை பொன்னையராஜபுரம் பகுதியில் தொடங்கிய இந்தப் பேரணி, தியாகி குமரன் வீதி, இடையர் வீதி, தாமஸ் வீதி ஆகிய வீதிகளின் வழியாக வந்து ராஜவீதி தேர்முட்டி திடலில் நிறைவடைந்தது.



இந்த பேரணியில், சிறுவர்கள் உட்பட ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர், பாஜக, இந்து முன்னனி, இந்து மக்கள் கட்சி என சங்பரிவார் அமைப்பை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.



முன்னதாக காவி கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய பின்பு, பேண்ட் வாத்தியங்கள் முழங்க பேரணியானது தொடங்கியது.



மதவிரோத முழக்கங்கள் எழுப்பக்கூடாது, ஆயுதங்கள் கையில் ஏந்தி பேரணி செல்லக்கூடாது, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்த கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகளை ஏற்கனவே காவல்துறையினர் விதித்திருந்த நிலையில், அதனடிப்படையில் இந்த ஊர்வலம் நடத்தப்பட்டது.



இந்தப் பேரணியின்போது, அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், ஊர்வலப்பாதை முழுவதும் கோவை மாநகர துணை ஆணையர் சந்தீஷ் தலைமையில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காவி கொடியை கையில் ஏந்தி சென்ற தொண்டர்களுக்கும் பாரதமாதா, ஹெக்டேவர், கோல்வார்க்கர் போன்றோரின் உருவ படங்களுடன் வந்த வாகனத்திற்கும் வழி நெடுகிலும் திரண்டிருந்த பெண்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து பேரணியின் நிறைவில் ராஜவீதி தேர்நிலைத்திடலில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி மற்றும் வீர சாகச பயிற்சிகள் நடத்தப்பட்டு பொது கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், மேகாலயா முன்னாள் ஆளுநர் சண்முகநாதன், பாஜக விவசாய பிரிவு மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...