கோவையில் ஆர்.எஸ்.எஸ் பேரணி - ஹெச்.ராஜா, அர்ஜூன்சம்பத் பங்கேற்பு!

கோவையில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் சீருடை பேரணியில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன்சம்பத் உட்பட ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர், பாஜக, இந்து முன்னனி, இந்து மக்கள் கட்சி என சங்பரிவார் அமைப்பை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


கோவை: நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, கோவையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சீருடை பேரணி நடைபெற்றது.

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து.



கோவையில் இன்று மாலை மாபெரும் பேரணி நடைபெற்றது.

சத்ரபதி வீரசிவாஜியின் 350ஆவது முடிசூட்டிய விழா, அம்பேத்கர் பிறந்தநாள் விழா, வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழா என முப்பெரும் விழாவாக நடத்தப்பட்ட பேரணியில் பா.ஜ.க மூத்த தலைவர் எச். ராஜாவும், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ஆகியோர் கலந்துகொண்டு சீருடை அணிந்து ஊர்வலமாக சென்றனர்.



கோவை பொன்னையராஜபுரம் பகுதியில் தொடங்கிய இந்தப் பேரணி, தியாகி குமரன் வீதி, இடையர் வீதி, தாமஸ் வீதி ஆகிய வீதிகளின் வழியாக வந்து ராஜவீதி தேர்முட்டி திடலில் நிறைவடைந்தது.



இந்த பேரணியில், சிறுவர்கள் உட்பட ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர், பாஜக, இந்து முன்னனி, இந்து மக்கள் கட்சி என சங்பரிவார் அமைப்பை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.



முன்னதாக காவி கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய பின்பு, பேண்ட் வாத்தியங்கள் முழங்க பேரணியானது தொடங்கியது.



மதவிரோத முழக்கங்கள் எழுப்பக்கூடாது, ஆயுதங்கள் கையில் ஏந்தி பேரணி செல்லக்கூடாது, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்த கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகளை ஏற்கனவே காவல்துறையினர் விதித்திருந்த நிலையில், அதனடிப்படையில் இந்த ஊர்வலம் நடத்தப்பட்டது.



இந்தப் பேரணியின்போது, அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், ஊர்வலப்பாதை முழுவதும் கோவை மாநகர துணை ஆணையர் சந்தீஷ் தலைமையில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காவி கொடியை கையில் ஏந்தி சென்ற தொண்டர்களுக்கும் பாரதமாதா, ஹெக்டேவர், கோல்வார்க்கர் போன்றோரின் உருவ படங்களுடன் வந்த வாகனத்திற்கும் வழி நெடுகிலும் திரண்டிருந்த பெண்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து பேரணியின் நிறைவில் ராஜவீதி தேர்நிலைத்திடலில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி மற்றும் வீர சாகச பயிற்சிகள் நடத்தப்பட்டு பொது கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், மேகாலயா முன்னாள் ஆளுநர் சண்முகநாதன், பாஜக விவசாய பிரிவு மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...