திருமூர்த்தி அணை நீர்மட்டம் தொடர் சரிவு - அணை பகுதியில் ஆடு மேய்க்கும் விவசாயிகள்!

உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் கோடை வெயில் மற்றும் மழை குறைந்ததன் காரணமாக தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால், அணை பகுதியில் தற்போது வெளியில் தெரியும் புல்வெளிகளில் விவசாயிகள் ஆடு மேய்த்து வருகின்றனர்.


திருப்பூர்: உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையில் நீர்மட்டம் குறைந்து வருவதால், அணை பகுதியில் உள்ள புல்வெளிகளில் விவசாயிகள் ஆடு மேய்த்து வருகின்றனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே 60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணை உள்ளது. பிஏபி தொகுப்பு அணைகளில் இது கடைசி அணையாகும். இதன் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.75 லட் சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த அணையில் இருந்து நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது. இது தவிர, உடுமலை நகருக்கும், நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கும் இந்த அணை மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.

தற்போது மூன்றாம் மண்டலத்துக்கு வரும் 20-ம் தேதி வரை தண்ணீர் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் குறைந்ததால் வெளியில் தெரியும் புல்வெளியில் விவசாயிகள் ஆடு மேய்க்கின்றனர்.



இந்நிலையில், பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு காரணமாக திருமூர்த்தி அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் அணையின் பின்பக்க இடங்களில் மண் மேடாக காட்சி அளிக்கிறது. அதில் விவசாயிகள் ஆடு மேய்த்து வருகின்றனர்.

அணையின் நீர்மட்டம் தற்போது 31.56 அடியாக உள்ளது. காண்டூர் கால்வாய் மூலம் 571 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 944 கன அடி நீர் வெளியேற்றப்படுவது குறிப்பிடதக்கது.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...