திருமூர்த்தி அணை நீர்மட்டம் தொடர் சரிவு - அணை பகுதியில் ஆடு மேய்க்கும் விவசாயிகள்!

உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் கோடை வெயில் மற்றும் மழை குறைந்ததன் காரணமாக தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால், அணை பகுதியில் தற்போது வெளியில் தெரியும் புல்வெளிகளில் விவசாயிகள் ஆடு மேய்த்து வருகின்றனர்.


திருப்பூர்: உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையில் நீர்மட்டம் குறைந்து வருவதால், அணை பகுதியில் உள்ள புல்வெளிகளில் விவசாயிகள் ஆடு மேய்த்து வருகின்றனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே 60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணை உள்ளது. பிஏபி தொகுப்பு அணைகளில் இது கடைசி அணையாகும். இதன் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.75 லட் சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த அணையில் இருந்து நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது. இது தவிர, உடுமலை நகருக்கும், நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கும் இந்த அணை மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.

தற்போது மூன்றாம் மண்டலத்துக்கு வரும் 20-ம் தேதி வரை தண்ணீர் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் குறைந்ததால் வெளியில் தெரியும் புல்வெளியில் விவசாயிகள் ஆடு மேய்க்கின்றனர்.



இந்நிலையில், பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு காரணமாக திருமூர்த்தி அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் அணையின் பின்பக்க இடங்களில் மண் மேடாக காட்சி அளிக்கிறது. அதில் விவசாயிகள் ஆடு மேய்த்து வருகின்றனர்.

அணையின் நீர்மட்டம் தற்போது 31.56 அடியாக உள்ளது. காண்டூர் கால்வாய் மூலம் 571 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 944 கன அடி நீர் வெளியேற்றப்படுவது குறிப்பிடதக்கது.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...