திருமூர்த்தி அணை நீர்மட்டம் தொடர் சரிவு - அணை பகுதியில் ஆடு மேய்க்கும் விவசாயிகள்!

உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் கோடை வெயில் மற்றும் மழை குறைந்ததன் காரணமாக தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால், அணை பகுதியில் தற்போது வெளியில் தெரியும் புல்வெளிகளில் விவசாயிகள் ஆடு மேய்த்து வருகின்றனர்.


திருப்பூர்: உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையில் நீர்மட்டம் குறைந்து வருவதால், அணை பகுதியில் உள்ள புல்வெளிகளில் விவசாயிகள் ஆடு மேய்த்து வருகின்றனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே 60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணை உள்ளது. பிஏபி தொகுப்பு அணைகளில் இது கடைசி அணையாகும். இதன் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.75 லட் சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த அணையில் இருந்து நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது. இது தவிர, உடுமலை நகருக்கும், நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கும் இந்த அணை மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.

தற்போது மூன்றாம் மண்டலத்துக்கு வரும் 20-ம் தேதி வரை தண்ணீர் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் குறைந்ததால் வெளியில் தெரியும் புல்வெளியில் விவசாயிகள் ஆடு மேய்க்கின்றனர்.



இந்நிலையில், பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு காரணமாக திருமூர்த்தி அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் அணையின் பின்பக்க இடங்களில் மண் மேடாக காட்சி அளிக்கிறது. அதில் விவசாயிகள் ஆடு மேய்த்து வருகின்றனர்.

அணையின் நீர்மட்டம் தற்போது 31.56 அடியாக உள்ளது. காண்டூர் கால்வாய் மூலம் 571 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 944 கன அடி நீர் வெளியேற்றப்படுவது குறிப்பிடதக்கது.

Newsletter

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...