கோவை வந்தடைந்த பொன்னியின் செல்வன் படக்குழுவினர் - டுவிட்டரில் பதிவு!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக படக் குழுவினர் விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்துள்ளனர்.


கோவை: பொன்னியின் செல்வன் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்க கோவைக்கு வருகை புரிந்துள்ள திரைப்பட குழுவினர்.

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து வருகின்ற 28ஆம் தேதி இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இரண்டாம் பாகத்தின் விளம்பர நிகழ்வுகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக இன்று கோவையில் படத்தின் விளம்பர நிகழ்வு நடைபெறுகிறது. சரவணம்பட்டி பகுதியில் உள்ள Prozone (தனியார்) மாலில் இந்நிகழ்வு இன்று மாலை 4:30 மணி அளவில் நடைபெறுகிறது.



இதனை முன்னிட்டு படக்குழுவினர் விமானம் மூலம் கோவை வந்தடைந்துள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இத்திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, நடிகைகள் திரிஷா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் தற்போது கோவைக்கு வருகை புரிந்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...