தாராபுரத்தில் ஓய்வுபெற்ற அரசு அலுவலர் வீட்டில் ரூ.10,000 கொள்ளை - மர்ம ஆசாமிகள் கைவரிசை!

தாராபுரம் அடுத்த கொண்டரசம்பாளையம் பகுதியை ஓய்வு பெற்ற அரசு அலுவலரான நடராஜன் (68) வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த ரூ.10,000 பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.



திருப்பூர்: தாராபுரம் அருகே ஓய்வு பெற்ற அரசு அலுவலர்ன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து ரூ,10,000 பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் அடுத்த கொண்டரசம்பாளையம் அருகே உள்ள எஸ்.என்.நகரை சேர்ந்தவர் நடராஜன் (68). அரசு பணியில் இருந்து ஓய்வபெற்ற அரசு அலுவலரான இவர், நேற்று முன்தினம் மாலை அருகில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார்.

இதனை நோட்மிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் பின்புறத்தில் உள்ள கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், வீட்டுக்கு திரும்பிய நடராஜன் வீட்டின் பின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளார். பின்னர், வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த துணிகள், பொருட்கள் கலைந்து கிடந்துள்ளது.

மேலும், அதில் இருந்த ரூ.10ஆயிரம் பணம் திருட்டு போனதும் தெரியவந்தது. இதுகுறித்து நடராஜன் தாராபுரம் காவல்நிலையத்தில், புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்ம ஆசாமிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...