தாராபுரத்தில் ஓய்வுபெற்ற அரசு அலுவலர் வீட்டில் ரூ.10,000 கொள்ளை - மர்ம ஆசாமிகள் கைவரிசை!

தாராபுரம் அடுத்த கொண்டரசம்பாளையம் பகுதியை ஓய்வு பெற்ற அரசு அலுவலரான நடராஜன் (68) வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த ரூ.10,000 பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.



திருப்பூர்: தாராபுரம் அருகே ஓய்வு பெற்ற அரசு அலுவலர்ன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து ரூ,10,000 பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் அடுத்த கொண்டரசம்பாளையம் அருகே உள்ள எஸ்.என்.நகரை சேர்ந்தவர் நடராஜன் (68). அரசு பணியில் இருந்து ஓய்வபெற்ற அரசு அலுவலரான இவர், நேற்று முன்தினம் மாலை அருகில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார்.

இதனை நோட்மிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் பின்புறத்தில் உள்ள கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், வீட்டுக்கு திரும்பிய நடராஜன் வீட்டின் பின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளார். பின்னர், வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த துணிகள், பொருட்கள் கலைந்து கிடந்துள்ளது.

மேலும், அதில் இருந்த ரூ.10ஆயிரம் பணம் திருட்டு போனதும் தெரியவந்தது. இதுகுறித்து நடராஜன் தாராபுரம் காவல்நிலையத்தில், புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்ம ஆசாமிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...