மத்தியில் நல்லாட்சியை உருவாக்கும் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார்..! - ஆ.ராசா பெருமிதம்!

கோவை கூடலூர் கவுண்டம்பாளையம் நகராட்சியில் புதிய நிழற்குடை திறந்து வைத்து பேசிய திமுக எம்.பி ஆ.ராசா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி உள்ளதாகவும், மத்தியில் நல்லாட்சியை உருவாக்கும் தலைவராக உள்ளார் எனவும் கூறினார்.



கோவை: மத்தியில் நல்லாட்சியை உருவாக்கும் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார் என நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் கூடலூர் அடுத்த கவுண்டம் பாளையம் நகராட்சியில் பல்வேறு திட்டங்களின் துவக்க விழாவில் நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்வில், புதிய நிழற்குடை திறந்து வைத்தல், நகர்ப்புற சுகாதாரம், ஆரோக்கிய மையத்திற்கு தரைமட்ட தொட்டி, கழிவு நீர் தொட்டி மற்றும் சுற்றுச்சுவர் அமைத்தல், வடிகால் மற்றும் வடிகால் மேல் கான்கிரீட் மூடி அமைத்தல், சமையலறை கட்டிடம் அமைத்தல்,



கென்னடி தென்றல் அவென்யூ பகுதியில் மரம் நடுதல், திருவள்ளூவர் பூங்கா சீர் அமைத்தல், பூங்கா நடைபாதை அமைத்தல், தடுப்பு சுவர் அமைத்தல், சாலை மற்றும் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட ரூபாய் 2 கோடி மதிப்பிலான திட்டங்களை நீலகிரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா துவங்கி வைத்தார்.



தொடர்ந்து பொதுமக்களிடையே ஆ.ராசா பேசியதாவது:

தமிழ்நாட்டில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிய முதல்வராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறார். இதனால் எதிர்கட்சிகள் அனைத்தும் வாயடைத்து போயுள்ளன. இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வராக நமது முதல்வர் உள்ளார்.

இந்த சட்டசபை கூட்டத்தில் முதல்வர் நீலகிரி தொகுதிக்கு பல திட்டங்களை வழங்கியுள்ளார். இந்தியாவிலுள்ள மதவாத சக்திகளை எதிர்க்கும் தலைவராக உள்ளார். மாநிலத்தில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. மத்தியிலும் நல்லாட்சி வரும். அந்த ஆட்சியை உருவாக்கும் சக்தி மிகு தலைவராக நமது முதல்வர் உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு, ஆணையாளர் பால்ராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள், திமுக கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...