உக்கடம் அருகே சாலையோரங்களில் நிற்கும் இருசக்கர வாகனங்களில் தொடரும் பெட்ரோல் திருட்டு!

உக்கடம் பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும், சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: உக்கடம் அருகே சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் பொள்ளாச்சி செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் உக்கடம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். பின்னர் பேருந்து நிலையம் அருகேயுள்ள உக்கடம் காவல் நிலையம் காம்பவுண்ட் சுவரின் அருகே வாகனத்தை நிறுத்தி விட்டு பொள்ளாச்சி சென்றார்.

அங்கு தனது வேலைகளை முடித்து விட்டு மீண்டும் உக்கடம் வந்து, இருசக்கர வாகனத்தை இயக்க முயற்சித்த போது முடியவில்லை. இதையடுத்து பார்த்த போது, பெட்ரோல் டேங்க் திறந்து கிடந்தது தெரியவந்தது. உள்ளே பார்த்த போது பெட்ரோல் சுத்தமாக இல்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், காலையில் தான் 3 லிட்டர் நிரப்பிக்கொண்டு வந்ததாகவும், ஆனால் முற்றிலும் பெட்ரோல் இல்லாமல் துடைத்து எடுக்கப்பட்டிருந்தது. இதனால் யாரோ பெட்ரோலை திருடி இருந்தது தெரியவந்தது.

பின்னர் அவர் சிறிது தூரம் மோட்டார் சைக்கிளை உருட்டி சென்று அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பி கொண்டு மீண்டும் சென்றார். கோவையில் அண்மை காலமாக இருசக்கர வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்களிலும் பெட்ரோல் திருடப்படுவது அதிகரித்துள்ளது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கூறியதாவது, உக்கடம் பேருந்து நிலையமானது 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாகும். உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து டவுன்ஹால் வரை கடைகள் அடர்த்தியாக நெருக்கமாக இருக்கும்.

கடைகளுக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்கள் கூட அந்த இடத்தில் நின்று பேசிக் கொண்டிருப்பார்கள். அப்படி இருந்தும் இப்பகுதியில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களில் தொடர் பெட்ரோல் திருட்டு நடப்பது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

சிலர் வெளியில் சொல்கிறார்கள். பலர் அதனை வெளியே சொல்ல முடியாமல் மவுனமாக சென்று விடுகின்றனர். பெரிய திருட்டு நடந்தால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம். ஆனால் இந்த பெட்ரோல் விஷயத்துக்காக புகார் கொடுப்பதா என்று பலரும் ஏமாற்றத்துடன் இருசக்கர வாகனத்தை உருட்டிக் கொண்டு செல்வதை காண முடிகிறது.

எனவே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். மேலும் உக்கடம் முதல் டவுன்ஹால் வரை சி.சி.டி.வி கேமரா பொருத்த வேண்டும். அவ்வாறு பல்வேறு விழிப்புணர்வுடன் செயல்பட்டால் தான் பெட்ரோல் திருட்டு தடுக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...