கோவை வீரபாண்டி மாரியம்மன் கோவிலில் இந்து முன்னணி சார்பில் திருவிளக்கு பூஜை!

கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகேயுள்ள வீரபாண்டி மாரியம்மன் கோவில் திடலில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெற்ற 1508 விளக்குகள் கொண்ட மாபெரும் திருவிளக்கு பூஜையை இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பங்கேற்று தொடங்கி வைத்தார்.



கோவை: பெரியநாயக்கன்பாளையம் அருகே இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற மாபெரும் திருவிளக்கு பூஜையை அந்த அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி பேரூராட்சியில் உள்ள மாரியம்மன் கோவிலில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள வீரபாண்டி பகுதியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள திடலில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில், 2ம் ஆண்டு 1508 விளக்குகள் கொண்ட மாபெரும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

விநாயகர் மற்றும் மகாலட்சுமி சிலைகள் பிரதிஷ்டை செய்து கணபதி ஹோமத்துடன் தொடங்கிய இந்த பூஜையில், முதலாவதாக சிலம்பாட்ட நிகழ்ச்சி, ஒயிலாட்டம் மற்றும் பரதநாட்டியம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



அதனைத் தொடர்ந்து கோ பூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை மற்றும் எதி பூஜை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்ற திருவிளக்கு பூஜையை இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.



இதனை ஸ்ரீ வாராஹி மந்திராலயத்தை சேர்ந்த மணிகண்ட சுவாமிகள் மற்றும் சிவ நாசர் பூஜையை நடத்தி வைத்தனர். இந்த பூஜையில் கலந்துக்கொண்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விளக்கு, பூக்கள், எண்ணைய், மஞ்சள், குங்குமம், வளையல், கண்ணாடி, சிப்பு, வெற்றிலை மற்றும் பாக்குகளை விழா குழுவினர் மூலம் வழங்கப்பட்டது.



இதனையடுத்து 1,508 பெண்கள் மற்றும் குழந்தைகள் விநாயகருக்கு பூஜை செய்து விளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். அதன்பிறகு ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெற்றன. இறுதியாக அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.



இந்த விழாவில் வீரபாண்டி, கூடலூர் கவுண்டம் பாளையம், நாயக்கனூர், சாமநாயக்கன் பாளையம், காளி பாளையம், திருமலைநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...