கர்ப்பப்பை கட்டி அறுவை சிகிச்சைக்கு சென்ற இளம்பெண் - சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட்டு பலியான சோகம்!

சரவணம்பட்டி அடுத்த சலீவன் வீதியை சேர்ந்த சக்தி திருமலா (24) என்ற இளம்பெண் கர்ப்பப்பை கட்டி அறுவை சிகிச்சைக்காக அத்திப்பாளையம் பிரிவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: சரவணம்பட்டி அருகே கர்ப்பப்பை கட்டி அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை மாவட்டம் சரவணம்பட்டி அருகேயுள்ள சலீவன் வீதியை சேர்ந்தவர் சக்தி திருமலா (24). இவர் தனது உறவினரான சதீஷ்குமார் என்பவரை கடந்தாண்டு திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில், இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், குழந்தை இல்லாமல் உள்ளது. இதனிடையே சக்தி திருமலா கீரனத்தத்தில் உள்ள போஸ் செஸ் பார்க் என்ற ஐடி நிறுவனத்தில் அசோசியேட்டாக வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு கர்ப்பப்பையில் கட்டி தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் முதல் செல்வபுரம் பேரூர் ரோட்டில் உள்ள ரூபா மெடிக்கல் சென்டர் என்ற மருத்துவமனையில் Dr. ருபா சரண்யா என்பவரிடம் சிகிச்சை பெற்று வந்தார்.

அதன் பிறகு வயிற்றில் உள்ள கட்டி பெரிதாகி விட்டதால் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்து,தங்களது மருத்துவமனையில் star health இன்சூரன்ஸ் கம்பெனி உடன் claim பெற வசதி இல்லை என்றும் அத்திப்பாளையம் பிரிவு சிவா மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று மருத்துவர் ரூபா சரண்யாவின் அறிவுறுத்தி உள்ளார்.

அதன்படி அவர் கடந்த் 13ஆம் தேதி காலை சுமார் 11.00 மணிக்கு அத்திபாளையம் பிரிவில் உள்ள சிவா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் . இந்நிலையில் நேற்று மாலை சுமார் 16.30மணியளவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி மருத்துவமனையில் அனஸ்தீசியா மருந்து கொடுத்துள்ளனர்.

அப்பொழுது அவருக்கு திடீரென மாரடைப்பு ( cardiac arrest) ஏற்பட்டுள்ளது தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக கே.ஜி மருத்துவமனைக்கு டாக்டர் ரூபா ஆம்புலன்ஸ் மூலமாக சக்தி திருமலாவை பந்தய சாலை எல்லை குட்பட்ட கே.ஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சக்தி திருமலா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறி அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு அவரது உடலை அனுப்பி வைத்தனர்.

சிகிச்சைக்காக சென்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...