பெண் காவலர்களின் பொன்விழா - கோவையில் 50 கி.மீ சைக்கிள் பயணம்!

தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவலர்கள் இணைந்து 50 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு கோவையில் 50 கி.மீட்டர் தூரம் சைக்கிள் பயணம் நடைபெற்றது. இதில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டர்.



கோவை: பெண் காவலர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக 50 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் நடைபெற்றது.

தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவலர்கள் இணைந்து 50 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு பொன்விழா கொண்டாடப்படுகிறது. பெண் காவலர்களின் சேவையை போற்றி மரியாதை செய்யும்விதமாக கோவையில் 50 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணம் நடைபெற்றது.



'நோ ஹெல்மெட், நோ ரைடு ... ஃபாலோ ரோட் ட்ராபிக் ரூல்ஸ்' என்ற விழிப்புணர்வுடனும் இந்த சைக்கிள் பயணம் நடந்தது. பிரபல சைக்கிளிங் வீரரான விஷ்ணு ராம் என்பவர் முயற்சியில் இந்த சைக்கிள் பயணம் நடந்தன.



கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணை ஆணையாளர் சுகாசினி, சைக்கிளிங் வீரர் விஷ்ணு ராம், காவலர்கள், பொதுமக்கள் என 120 பேர் கலந்துகொண்டனர்.



மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆரம்பித்த இந்த சைக்கிள் பயணம் ஆர்.எஸ்.புரம், வடவள்ளி, மாதம்பட்டி, தொண்டாமுத்தூர், தேவராயபுரம், பேரூர் வழியாக செல்வபுரம் வந்தடைந்தனர். 50 கிலோ மீட்டர் தூரத்தினை 2 மணி நேரம் 43 நிமிடங்களில் கடந்தனர்என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...