தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் - கோவை கோயில்களில் பக்தர்கள் கூட்டம்!

கோவையில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அதிகாலை முதலே பொதுமக்கள், கோவில்களில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்துவருகின்றனர். சித்திரை முதல் நாளையொட்டி, வீடுகளில் பழங்கள் வைத்தும் மக்கள் வழிபட்டனர்.



Coimbatore: தமிழகத்தில் தமிழ்புத்தாண்டு (சித்திரைக்கனி) இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, பொதுமக்கள், தங்களது இல்லங்களில், பல வகையான பழங்களை வைத்து வழிபாடு செய்த பின்னர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தமிழ் புத்தாண்டையொட்டி, கோவையில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. முக்கியமாக புலியகுளம் விநாயகர் கோவில், கோனியம்மன் கோவில், மருதமலை, பேரூர் சிவன் கோவில் ஆகிய கோவில்களில் அதிகாலை முதலில் இருந்தே பக்தர்கள் அதிக அளவு வந்தவண்ணம் உள்ளனர்.



புலியகுளத்தில் உள்ள முந்தி விநாயகர் திருக்கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.



உலக புகழ் பெற்ற 19 அடி உயரம் 190 டன் எடை கொண்ட ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய முந்தி விநாயகர் சிலைக்கு சித்தரை கனியை முன்னிட்டு ஆப்பிள், ஆரஞ்சு, பலாப்பழம் அன்னாசி, வாழைத்தார், மாதுளை, கொய்யா என 2 டன் அளவிற்கு பழங்களை கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், தரிசனத்திற்காக இங்கு வரும் பக்தர்கள் அருகம்புல்லை காணிக்கையாக விநாயகருக்குச் செலுத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...