தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் - கோவை கோயில்களில் பக்தர்கள் கூட்டம்!

கோவையில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அதிகாலை முதலே பொதுமக்கள், கோவில்களில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்துவருகின்றனர். சித்திரை முதல் நாளையொட்டி, வீடுகளில் பழங்கள் வைத்தும் மக்கள் வழிபட்டனர்.



Coimbatore: தமிழகத்தில் தமிழ்புத்தாண்டு (சித்திரைக்கனி) இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, பொதுமக்கள், தங்களது இல்லங்களில், பல வகையான பழங்களை வைத்து வழிபாடு செய்த பின்னர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தமிழ் புத்தாண்டையொட்டி, கோவையில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. முக்கியமாக புலியகுளம் விநாயகர் கோவில், கோனியம்மன் கோவில், மருதமலை, பேரூர் சிவன் கோவில் ஆகிய கோவில்களில் அதிகாலை முதலில் இருந்தே பக்தர்கள் அதிக அளவு வந்தவண்ணம் உள்ளனர்.



புலியகுளத்தில் உள்ள முந்தி விநாயகர் திருக்கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.



உலக புகழ் பெற்ற 19 அடி உயரம் 190 டன் எடை கொண்ட ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய முந்தி விநாயகர் சிலைக்கு சித்தரை கனியை முன்னிட்டு ஆப்பிள், ஆரஞ்சு, பலாப்பழம் அன்னாசி, வாழைத்தார், மாதுளை, கொய்யா என 2 டன் அளவிற்கு பழங்களை கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், தரிசனத்திற்காக இங்கு வரும் பக்தர்கள் அருகம்புல்லை காணிக்கையாக விநாயகருக்குச் செலுத்தி வருகின்றனர்.

Newsletter

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...