பல்லடம் அருகே குப்பைகள் கொட்ட வந்த வாகனங்களை சிறைபிடித்து மக்கள் சாலைமறியல்!

பல்லடம் அடுத்த ஆறுமுத்தாம்பாளையம் அருகேயுள்ள சாய் குரு கார்டன் பகுதியில் குப்பைகளை கொட்ட வந்த லாரி மற்றும் டிராக்டரை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வந்த ஊராட்சி செயலாளரையும் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: பல்லடம் அருகே சட்டவிரோதமாக குப்பைகளை கொட்ட வந்த லாரி மற்றும் டிராக்டரை பொதுமக்கள் சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரைப்புதூர் ஊராட்சி மற்றும் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்கு இடையில் அமைந்துள்ளது சாய் குரு கார்டன். இங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.



கரைப்புதூர் மற்றும் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில் இருந்து கோழி கழிவுகள், ஊராட்சி குப்பைகள் அனைத்தையும் சாய் குரு கார்டனில் உள்ள ஓடையில் கடந்த 10 ஆண்டுகளாக கொட்டப்பட்டு வருகிறது.

இதனை கண்டித்து, அப்பகுதி மக்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை குப்பைகள் கொட்டுவதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

நீரோடையில் குப்பை கொட்டி வைத்துள்ளதால் அந்த பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளதாகவும், மழைக்காலங்களில் கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும், ஈக்கள் தொல்லை அதிகரித்துள்ளதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.



இந்நிலையில் இன்று கரைப்புதூர் ஊராட்சியில் இருந்து குப்பைகளை கொட்ட வந்த லாரி மற்றும் டிராக்டர் ஒன்றை அப்பகுதி மக்கள் சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் ஊராட்சி செயலாளர் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.



அப்போது, பேச்சை வார்த்தைக்கு வந்த ஊராட்சி செயலாளரை பொதுமக்கள் சிறைபிடித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இன்னும் இடம் தேர்வு செய்யப்படவில்லை என்றும், விரைவில் குப்பை கிடங்கு அமைத்து குப்பைகளை சுத்திகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஊராட்சி செயலாளர் மற்றும் காவல் துறையினர் உறுதி அளித்த நிலையில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பொதுமக்களின் இந்த போராட்டம் காரணமாக அப்பகுதி சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...