உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா - அன்னதானம் வழங்கிய கலாசு தொழிலாளர்கள்!

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், அனைத்து கலாசு தொழிலாளர் சங்கம் சார்பில் அன்னதானம் மற்றும் நீர் மோர் ஆகியவை கோவிலுக்கு வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.


திருப்பூர்: உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, அனைத்து கலாசு தொழிலாளர் சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே புகழ்பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா இன்று மாலை நடைபெற உள்ளது.



இந்த நிலையில் உடுமலை தினசரி சந்தை அனைத்து கலாசு தொழிலாளர் சங்கம் சார்பில் தேர் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த வேலாயுதம், சரவணன், அப்பாஸ் ,மணிகண்டன், திமுக தொழிற்சங்கம் ரகுவரன், சண்முகம், செந்தில்குமார் ,காமராஜ், ஐ.என்.டி.சி தொழிற்சங்கம் கணேஷ், சீனிவாசன், வடிவேல், சங்கர் ரவி, பிஎம்எஸ் தொழிற்சங்கம் கணபதி, கார்த்திகேயன், காளியப்பன், பிரபு குமார், எம் எல் எப் தொழிற்சங்கம் தங்கபாண்டி, செல்வராஜ், சரண்ராஜ், நாகராஜ் உட்பட கலாசு தொழிற்சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...