தலைமை செயலக வாசல் முன்பு சீருடையில் தலைமை காவலர் தனது மகளுடன் திடீர் சாலை மறியல்!

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் தனது மகளின் வலது கால் பாதிக்கப்பட்ட நிலையில், தவறான சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமை செயலகம் வாயில் முன்பு தலைமை காவலர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.



சென்னை: சென்னை தலைமைச் செயலகம் வாசலில் சீருடையில் இருந்த தலைமை காவலர் தனது மகளோடு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் கோதண்டபாணி. இவருக்கு பிரதீக்‌ஷா என்ற 10 வயது மகள் உள்ளார்.

இந்நிலையில், பிரதீக்‌ஷா தனது 3 வயது முதல் சிறுநீரக பிரச்சனை (Nephrology)காரணமாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளை கடந்த 5 வருடங்களாக உட்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில், மாத்திரையின் எதிர்விளைவு காரணமான பிரதிக்‌ஷாவின் வலது கால் பாதத்தில் அரிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, மீண்டும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்தவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பிரதீக்‌ஷாவுக்கு ரத்த உறைவு ஏற்பட்டதாக தவறாக கணித்ததன் விளைவாக பாதத்திற்கு ரத்தம் செல்லாமல் கருப்பு நிறமாக மாறியதுடன் உடலில் உள்ள ரத்தம் கெட்டுப் போனதாக கூறப்படுகிறது.

மேலும் தங்கள் அனுமதியின்றி ரத்த சுத்திகரிப்பு (Dialysis)செய்யப்பட்டதன் விளைவால் வலிப்பு நோயும் ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தும் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சிய போக்கால் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.



எனவே இதற்கு காரணமான மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி கோதண்டபாணி பாதிக்கப்பட்ட தனது மகளுடன் தலைமை செயலக வாயில் முன்பு திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.



தலைமை காவலரின் இந்த திடீர் போராட்டத்தின் காரணமாக தலைமை செயலகம் வெளியே சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...