திருமூர்த்தி அணை பகுதியில் காட்டு யானைகள் உலா

உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி மலைக்கு அருகேயுள்ள தோட்டத்தில் 30 தென்னை மரங்களை சேதப்படுத்திய யானைகள் சாலையை மறித்து நின்றதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.


திருப்பூர்: உடுமலை அருகே சாலையை மறித்து நின்ற யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள திருமூர்த்தி அணை அருகே அதிகாலை 4 மணியளவில் ஓடை வழியாக வந்த குட்டியுடன் வந்த 4 யானைகள், திருமூர்த்திமலை நீச்சல் குளம் அருகே முகாமிட்டன.



பின்னர் அணைக்கு சென்று தண்ணீர் குடித்துவிட்டு, அருகேயுள்ள கருணாகரன் என்பவருக்கு சொந்தமான தென்னந் தோப்புக்குள் புகுந்து 30-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதமாக்கியுள்ளன.

இதைத்தொடர்ந்து தோட்டத்தை விட்டு வெளியேறிய யானைகள் திருமூர்த்திமலைக்கு செல்லும் சாலையில் நின்றதைப் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...