பல்லடம் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலியான சோகம்!

பல்லடம் அடுத்த வரப்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் பரத், நண்பர்களுடன் வதம்பச்சேரி அருகே தோட்டத்தில் உள்ள தொட்டியில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: பல்லடம் அருகே நண்பர்களுடன் தொட்டியில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே வரப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வெங்கடேஷ் - அனுசுயா தம்பதி. இவர்களுக்கு பரத் மற்றும் தருண் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், பரத் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விட்டு தற்போது கிணத்துக்கடவில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள நிலையில் இன்று தனது நண்பர்களுடன் வதம்பச்சேரி அருகே தோட்டத்தில் உள்ள தொட்டியில் குளிக்க சென்றுள்ளார்.

பரத்திற்கு நீச்சல் தெரியாத நிலையில் தொட்டியில் குளிப்பதற்காக குதித்துள்ளார். நீச்சல் தெரியாததால் நீரில் தத்தளித்த பரத்தை அவரது நண்பர்கள் மீட்டுள்ளனர்.



இதுகுறித்து பரத்தின் குடும்பத்திற்கு அவரது நண்பர்கள் தகவல் அளித்துள்ளனர். பின்பு பரத்தை சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.



நீச்சல் தெரியாமல் நண்பர்களோடு குளிக்கச் சென்ற போது கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...