பல்லடம் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலியான சோகம்!

பல்லடம் அடுத்த வரப்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் பரத், நண்பர்களுடன் வதம்பச்சேரி அருகே தோட்டத்தில் உள்ள தொட்டியில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: பல்லடம் அருகே நண்பர்களுடன் தொட்டியில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே வரப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வெங்கடேஷ் - அனுசுயா தம்பதி. இவர்களுக்கு பரத் மற்றும் தருண் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், பரத் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விட்டு தற்போது கிணத்துக்கடவில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள நிலையில் இன்று தனது நண்பர்களுடன் வதம்பச்சேரி அருகே தோட்டத்தில் உள்ள தொட்டியில் குளிக்க சென்றுள்ளார்.

பரத்திற்கு நீச்சல் தெரியாத நிலையில் தொட்டியில் குளிப்பதற்காக குதித்துள்ளார். நீச்சல் தெரியாததால் நீரில் தத்தளித்த பரத்தை அவரது நண்பர்கள் மீட்டுள்ளனர்.



இதுகுறித்து பரத்தின் குடும்பத்திற்கு அவரது நண்பர்கள் தகவல் அளித்துள்ளனர். பின்பு பரத்தை சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.



நீச்சல் தெரியாமல் நண்பர்களோடு குளிக்கச் சென்ற போது கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...