கோவையிலிருந்து மதுரைக்கு சென்ற அரசு பேருந்து நடத்துநருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் பரபரப்பு!

கோவையிலிருந்து மதுரைக்கு சென்ற அரசுப் பேருந்து பல்லடம் பேருந்து நிலையம் அருகே வந்த போது பணியில் இருந்த நடத்துநர் சீனி என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், பயணிகள் உதவியுடன் அவர் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


திருப்பூர்: கோவையிலிருந்து மதுரைக்கு சென்ற அரசுப் பேருந்து நடத்துநருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், பயணிகள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த ராம்ராஜ் என்ற அரசுப் பேருந்து ஓட்டுநரும், மதுரையை சேர்ந்த பேருந்து நடத்துநர் சீனி என்பவரும் இன்று காலை மதுரை புறநகர் பேருந்து பணிமனையிலிருந்து கோவைக்கு வந்துள்ளனர். மீண்டும் கோவையிலிருந்து மதுரை நோக்கி பயணிகளுடன் சென்ற போது, பல்லடம் பேருந்து நிலையம் அருகே நடத்துநர் சீனிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.



இதைக் கண்ட ஓட்டுநர் ராமராஜ் மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகள் உடனடியாக பேருந்தை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.



பல்லடம் அரசு மருத்துவமனையில் நடத்துநர் சீனி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து ஓட்டுநர் ராமராஜிடம் விசாரித்த போது, நடத்துநர் சீனி கடந்த வாரம் முழுவதும் டெல்லியிலிருந்ததாகவும் நேற்று மதுரை திரும்பிய நிலையில், ஒரு நாள் விடுப்பு கேட்டதாகவும், பணிமனை மேலாளர் விடுப்பு அளிக்க மறுத்ததால் சீனி பணிக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

காலை முதலே நடத்துநர் சீனி மிகுந்த சோர்வுடன் காணப்பட்டதாகவும், திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. சரியான நேரத்தில் பேருந்து ஓட்டுநர் ராமராஜ், நடத்துநர் சீனியை பயணிகளோடு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சேர்த்ததால் சீனி உயிர் பிழைத்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் நடத்துநர் சீனியை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Newsletter

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...