கோவை ஏர்போர்ட்டில் ஸ்கேனர் ஆபரேட்டர்கள் நியமனம் - விமான நிலையம் ஆணையகம் நடவடிக்கை!

கோவை விமான நிலையத்தில் காலியாக இருந்த ஸ்கேனர் ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கு 4 ஊழியர்களை விமான நிலைய ஆணையகம் நியமித்துள்ளது. அடுத்த மாதம் முதல் உள்நாட்டுப் பிரிவில் 350 டன் சரக்குகள் கையாளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைந்துள்ளது ஒருங்கிணைந்த சரக்கக வளாகம். உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பல்வேறு வெளிநாடுகளுக்கும் சரக்குகள் கையாளப்படுகின்றன.

மாதந்தோறும் சராசரியாக உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 700 டன் மற்றும் வெளிநாட்டு போக்குவரத்து பிரவில் 150 டன் வீதம் 850 டன் எடையிலான சரக்குகள் கையாளப்பட்டு வந்தன.

புதிய விதியின்படி ‘ஸ்கேனர் ஆபரேட்டர்’பணிக்கு ஊழியர்கள் நியமிக்க காலதாமதம் ஏற்பட்டதால் கடந்த மூன்று மாதங்களாக பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது. தற்போது நான்கு ஊழியர்களை விமான நிலைய ஆணையகம் நியமித்துள்ளது.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:

ஒவ்வொரு மாதமும் கோவையிலிருந்து அனுப்புவது மற்றும் கோவைக்கு அனுபப்படுவது என இரண்டும் சேர்த்து 700 டன் சரக்குகள் கையாளப்பட்டு வந்தன. விமான நிறுவனங்களே ஸ்கேனர் ஆபரேட்டர்களை நியமித்து வந்த நிலையில், விமான நிலைய ஆணையகம் புதிய விதியை அமல்படுத்தியது.

அதன்படி விமான நிலைய ஆணையகம் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்ட ஊழியர்கள் மட்டுமே இப்பணியில் அமர்த்த வேண்டும். கோவையில் பயிற்சி பெற்ற ஊழியர்கள் இல்லாத காரணத்தால், கடந்த 3 மாதங்களாக உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் மாதந்தோறும் கோவையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு அனுப்பப்படும் 350 டன் சரக்குகள் மட்டும் வேறு விமான நிலையங்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. இதனால் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், விமான நிலைய ஆணையக தலைமையகம் கோவைக்கு 4 ஸ்கேனிங் ஆபரேட்டர்களை நியமித்துள்ளது. அதில், ஒருவர் நேற்று முன்தினம் பணியில் சேர்ந்து விட்டார். மீதமுள்ளவர்கள் சில நாட்களில் பணியில் சேர உள்ளனர். மே மாதம் முதல் நான்கு பேரும் பணியாற்ற தொடங்குவார்கள்.

இதனால், மீண்டும் வழக்கம் போல் சரக்கு போக்குவரத்து கையாளும் அளவு பழைய நிலைக்கு திரும்பும். கோவை விமான நிலையத்துக்கு குறைந்தபட்சம் 10-க்கும் மேற்பட்ட ஸ்கேனிங் ஆப்ரேட்டர்கள் தேவைப்படுகின்றனர். இதற்கான ஊழியர்கள் நேர்காணல் நடவடிக்கையை விமான நிலைய ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...