கோவையில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

கோவையில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை கண்டறியும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களில் 500 குழந்தைகள் கண்டறிப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை கண்டறியும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் பள்ளிக் கல்விப் பணி இல்லாத குழந்தைகளின் எண்ணிக்கையைக் கண்டறியும் பணி கடந்த 4 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இந்தக் கணக்கெடுப்பில் ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், சிறப்பு ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது,

கோவை உட்பட 15 மாவட்டங்களில் பள்ளி செல்லாத குழந்தைகளின் கணக்கெடுக்கும் பணி முழுவீச்சில் தொடங்கியுள்ளது. இப்பணியில் 150-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். துல்லியமான எண்களை பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களைக் கண்டறிய, அந்தப் பள்ளி ஆசிரியர்கள், அந்தந்த பள்ளிகளுக்குச் சென்று, எத்தனை பேர் பள்ளியை விட்டு பாதியில் வந்து சென்றுள்ளனர் என்ற விவரங்களைப் பெற்று கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

இந்த கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட அனைத்து தகவல்களும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு, சர்வே என்ற மொபைல் செயலியில் பதிவேற்றப்படுகிறது. பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்கின்றனர்.

மேலும் கண்டறியப்பட்டுள்ள குழந்தைகளை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 4 நாட்களில் 500 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் கல்வியாண்டிலும் அவர்களுக்கு தொடர்ந்து கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...