கோவையில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

கோவையில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை கண்டறியும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களில் 500 குழந்தைகள் கண்டறிப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை கண்டறியும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் பள்ளிக் கல்விப் பணி இல்லாத குழந்தைகளின் எண்ணிக்கையைக் கண்டறியும் பணி கடந்த 4 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இந்தக் கணக்கெடுப்பில் ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், சிறப்பு ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது,

கோவை உட்பட 15 மாவட்டங்களில் பள்ளி செல்லாத குழந்தைகளின் கணக்கெடுக்கும் பணி முழுவீச்சில் தொடங்கியுள்ளது. இப்பணியில் 150-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். துல்லியமான எண்களை பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களைக் கண்டறிய, அந்தப் பள்ளி ஆசிரியர்கள், அந்தந்த பள்ளிகளுக்குச் சென்று, எத்தனை பேர் பள்ளியை விட்டு பாதியில் வந்து சென்றுள்ளனர் என்ற விவரங்களைப் பெற்று கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

இந்த கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட அனைத்து தகவல்களும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு, சர்வே என்ற மொபைல் செயலியில் பதிவேற்றப்படுகிறது. பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்கின்றனர்.

மேலும் கண்டறியப்பட்டுள்ள குழந்தைகளை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 4 நாட்களில் 500 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் கல்வியாண்டிலும் அவர்களுக்கு தொடர்ந்து கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...