ஒன்றிய அரசின் போட்டி தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்துக..! - கோவையில் DYFI போராட்டம்!

மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை அந்தந்த மாநில மொழிகளில் நடத்த கோரியும், சி.ஆர்.பி.எப் தேர்வை தமிழ் மொழியிலும் நடத்த வேண்டும் என வலியுறுத்தியும் கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: ஒன்றிய அரசின் போட்டித்தேர்வுகள் அந்தந்த மாநில மொழிகளிலேயே நடத்திட வலியுறுத்தி கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒன்றிய அரசின் போட்டித் தேர்வுகளை அந்தந்த மாநில மொழிகளிலேயே நடத்திட கோரியும், CRPF தேர்வை தமிழ் மொழியிலும் நடத்த வேண்டும் என வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில், தமிழ்நாடு முழுவதும் இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலகத்திற்கு முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதில் தமிழ் மொழியை தொடர்ந்து புறக்கணிப்பதாக கூறி, ஒன்றிய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மேலும், இந்த போராட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அர்ச்சுனன் கூறுகையில், கடந்த பல வருடங்களாக CRPF தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே நடைபெறுகிறது. இதனால் பிற மொழிகளை தாய்மொழியாக கொண்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் ஒன்றிய அரசு போட்டி தேர்வுகள் அனைத்தையும் அந்தந்த மாநில மொழிகளில் நடத்த வேண்டும், என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...