கவுண்டச்சிபுதூர் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கவுண்டச்சிபுதூர் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குப்பைகள் அகற்றப்படாததால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.


தாராபுரம்: தாராபுரம் அருகே கவுண்டச்சிபுதூர் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் குப்பைகளை முறையாக அகற்றாததால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டி திருப்பூர் தெற்கு மாவட்ட இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கவுண்டச்சிபுதூர் ஊராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி மதிவாணி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆயிஷா, சுரபி, மணி, கார்த்திக் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் பேசிய கட்சியின் மாவட்ட அமைப்புக்குழு தலைவர் சங்கர், கவுண்டச்சிபுதூர் ஊராட்சி முழுவதும் குப்பைகள் அகற்றாமல் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. சீரான முறையில் குடிநீர் வழங்க வேண்டும். ஊராட்சி முழுவதும் தார்ச்சாலைகள் மற்றும் கான்கிரீ்ட் சாலைகள் போடவேண்டும்.

ஊராட்சி தலைவர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும்போது சொத்து விவரங்களில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் ரூ.1 லட்சம் மட்டுமே என கணக்கில் காட்டியுள்ளார். தற்போது 3 ஆண்டுகள் கடந்த நிலையில் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.

ஊராட்சி நிர்வாகம் டெண்டர்கள்விட மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும், 3 மாதங்கள் முன்பு ஊராட்சி நிர்வாகத்தை கலைக்க உத்தரவு பிறப்பித்தார். பொதுமக்கள் பல்வேறு சான்றிதழ்கள் பெறச் செல்லும்போது ஊராட்சியில் லஞ்சம் பெறப்படுகிறது. உடனடியாக, மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஊராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பைகளை அகற்றாவிட்டால் இந்து மக்கள் கட்சி சார்பாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...