தண்ணீர் தொட்டியில் விழுந்த 2 கட்டுவிரியன் பாம்புகள் - பத்திரமாக மீட்ட இயற்கை ஆர்வலர்!

தாராபுரம் அருகேயுள்ள மூலனூரில் விவசாய தோட்டத்தில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த 5 அடி நீளம் கொண்ட 2 கட்டுவிரியன் பாம்புகளை இயற்கை ஆர்வலர் அன்பரசு பத்திரமாக பிடித்து மற்றொரு கிணற்றில் பாதுகாப்பாக விட்டனர்.


திருப்பூர்: தாராபுரம் அடுத்த மூலனூர் அருகே விவசாய தோட்டத்தில் தண்ணீர் தொட்டியில் இருந்த 5 அடி நீளமுள்ள 2 கட்டுவிரியன் பாம்புகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன.

மூலனூர் அருகே உள்ள இடைக்கல்படி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராணி. இவரது விவசாய தோட்டத்தில் சுமார் 8 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டி உள்ளது.

இந்த தண்ணீர் தொட்டியில் 5 அடி நீளம் உள்ள அதிக விஷத்தன்மை கொண்ட இரண்டு கட்டுவிரியன் பாம்புகள் இரவு நேரத்தில் தண்ணீர் தொட்டியில் விழுந்து கிடந்துள்ளது. தண்ணீர் தொட்டியில் சுமார் 2 அடி அளவு தண்ணீர் இருந்ததால் மேலே வர முடியாமல் இரண்டு பாம்புகளும் தவித்து வந்ததாக கூறப்படுகிறது.



இதனையடுத்து செல்வராணி அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் அன்பரசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த இயற்கை ஆர்வலர் அன்பரசு மற்றும் அவரது நண்பர்கள் நேரில் சென்று இரண்டு பாம்புகளையும் தண்ணீர் தொட்டியில் இருந்து உயிருடன் மீட்டனர்.

மேலும் அவற்றை அருகே இருந்த பாழடைந்த கிணற்று பகுதியில் உயிருடன் பாதுகாப்பாக விட்டனர்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...