உடுமலை மாரியம்மன் கோவில் நன்கொடை பெறுவதில் முறைகேடு - தூக்கத்தில் நடந்த தவறு என அதிகாரி விளக்கம்!

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நன்கொடை வழங்கும் இடத்தில் ரூ.200 நன்கொடை வழங்கினால் ரூ.100க்கான ரசீது வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இரவு பகலாக ஊழியர்கள் உறக்கமின்றி வேலை செய்ததால் தவறு நிகழ்ந்து விட்டதாக செயல் அலுவலர் சினிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.


திருப்பூர்: உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நன்கொடை பெறுவதில் நடைபெற்ற தவறு தூக்கத்தில் நிகழ்ந்ததாக அதிகாரி விளக்கம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 28ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கிய நிலையில் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்த நிலையில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு நன்கொடை வழங்கும் இடத்தில் ரூ.200 நன்கொடை வழங்கினால் ரூ.100க்கான ரசீது வழங்கப்பட்டு முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.



இதுதொடர்பாக உடுமலை இந்து சாம்ராஜ்யம் நிறுவனத் தலைவர் சக்திவேல் தலைமையில் செயல் அலுவலர் சினிவாசனிடம், இதுகுறித்து நேரில் விளக்கம் கேட்கப்பட்டது.

அப்பொழுது பேசிய அவர், இரவு பகலாக ஊழியர்கள் பணியாற்றி வருவதால் தூக்க கலக்கத்தில் சிறு தவறு ஏற்பட்டு விட்டது. இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இனி பார்த்துக் கொள்ளப்படும் என்று புது விளக்கம் அளித்துள்ளார்.

தூக்கத்தில் இருந்த காரணத்தால் தவறு ஏற்பட்டு விட்டது என செயல் அலுவலர் சினிவாசன் விளக்கம் ஏற்கக் கூடியது அல்ல. உரிய விசாரணை நடத்த வேண்டும் என பக்தர்கள் தரப்பில் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...