வனத்தை விட்டு வெளியேறிய மான்.. துரத்திய நாய்கள்..! - மானை மீட்டு வனப்பகுதியில் விட்ட வனத்துறையினர்!

பெரியநாயக்கன்பாளையம் அருகே மலைப்பகுதியில் இருந்து வெளியேறி மலை அடிவாரத்திற்கு வந்த மானை, நாய்கள் துரத்தியதால், தப்பிப்பதற்காக தெற்குப்பாளையம் பகுதியில் உள்ள வீட்டில் மான் புகுந்துள்ளது. மானை மீட்டு வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விட்டனர்.



கோவை: பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயிடம் தப்பிய மானை, வனத்துறையினர் பாதுகாப்பாக பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனத்துறைக்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுயானைகள், சிறுத்தைகள், மான்கள் உள்ளிட்டவைகள் வாழ்ந்து வருகின்றன.

இந்த விலங்குகள் அவ்வப்பொது உணவு மற்றும் தண்ணீரை தேடி ஊருக்குள் வந்து விடுகின்றன. உடனடியாக வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து காட்டு விலங்குகளை வனப்பகுதிக்கு அனுப்பி வைப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.



இந்த நிலையில் நேற்று மாலை பெரியநாயக்கன்பாளையம் வனத்துறைக்குட்பட்ட மலைப்பகுதியில் இருந்து ஒரு மான் வழி தெரியாமல் மலை அடிவாரத்திற்கு வந்துள்ளது.



அப்போது அங்கிருந்த நாய்கள் அந்த மானை துரத்த மான் தப்பிப்பதற்காக தெற்குப்பாளையம் பகுதிக்குள் உள்ள ஒர் வீட்டின் புகுந்துள்ளது. அதன்பிறகு அதனால் வெளியே வரமுடியவில்லை.

அதற்குள் அங்கிருந்த பொதுமக்கள் பார்த்து மானை துரத்தி வந்த நாயை விரட்டினர். தொடர்ந்து பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் அந்த மானை பாதுகாப்பாக பிடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விட்டனர்.

அதற்குள் அங்கிருந்த பொதுமக்கள் மானை வீடியோ எடுத்து சமூக வலைப்பக்கங்களில் பரப்பியுள்ளனர். அது தற்போது வைரலாகியுள்ளது.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...