கோவையில் 26 லட்சம் காலி மதுபாட்டிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன..! - டாஸ்மார்க் நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து காலி மதுபாட்டில்களை சாலையோரங்களில் வீசி செல்வதை தடுக்கும் பொருட்டு, பாட்டில்கள் திரும்ப பெறப்படும் என டாஸ்மாக் நிறுவனம் அறிவித்த நிலையில், ஒரு வாரத்தில் 26 லட்சத்திற்கும் மேற்பட்ட காலி பாட்டில்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் 26 லட்சத்திற்கும் அதிகமான மதுபாட்டில்கள் பெறப்பட்டுள்ளதாக டாஸ்மாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து காலி மதுபாட்டில்களை சாலையோரங்களில் வீசி செல்வதை தடுக்கும் பொருட்டு, டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மதுபான பாட்டில்களிலும் 10 ரூபாய் கூடுதலாக பெறப்பட்ட அதற்கான ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்யப்படும் எனவும்

பின்னர் வாடிக்கையாளர்கள் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காலி மதுபான பாட்டில்களை மதுபான கடைகளில் திருப்பிக் கொடுத்தால் பெறப்பட்ட 10 ரூபாய் மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அறிவிக்கப்பட்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு பத்து ரூபாய் அதிகமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

அதே சமயம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காலி மதுபாட்டில்களை வாடிக்கையாளர்கள் மதுபான கடைகளில் திரும்ப வழங்கிய நிலையில் 10 ரூபாய் திருப்பித் தரப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை இந்த ஒரு வார காலத்தில் 26 லட்சத்து 96 ஆயிரத்து, 71 வாலி மது பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட டாஸ்மார்க் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை வடக்கு மண்டலத்தில் 166 மதுபான கடைகளில் 17,56,997 மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் 12,91,506 மது பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், 4,65,491 மது பாட்டில்கள் திரும்ப வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தெற்கு மண்டலத்தில் 139 கடைகளில் விற்பனை செய்யப்பட்ட 19,24,708 மது பாட்டில்களில் 14,04,565 காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் 5,20,143 மது பாட்டில்கள் திரும்ப வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...