கோவை சிறுமுகையில் பிடிப்பட்ட அரிய வகை நாகப்பாம்பு!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையை சேர்ந்த ராஜ்குமார்(48) என்பவர் வீட்டின் உள்ள குடிநீர் தொட்டியில் மறைந்திருந்த 5 அடி நீளமுள்ள அரியவகை நாகப்பாம்பை, பாம்பு பிடி வீரர் காஜாமைதீன் லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டார்.


கோவை: சிறுமுகையில் குடிநீர் தொட்டியில் பதுங்கியிருந்த அரியவகை நாகப்பாம்பை பாம்பு பிடி வீரர் பிடித்து வனப்பகுதியில் விட்டார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை ரேயான்நகரை சேர்ந்தவர் ராஜ்குமார்(48). விவசாயியான இவரது வீட்டிற்கு அருகே உள்ள குடிநீர் தொட்டியில் கொடிய விஷமுடைய பாம்பு ஒன்று சுற்றித் திரிந்தது.

இது குறித்து பழத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த பாம்பு பிடி வீரரான காஜாமைதீனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து குடிநீர் தொட்டியிலிருந்த 5 அடி நீளமுள்ள அரிய வகை நாகப்பாம்பை லாவகமாக பிடித்தார்.

பின்னர் அந்தப் பாம்பினை சிறுமுகை வனத்துறையினர் அறிவுறுத்தலின்படி, வனப்பகுதியில் விட்டார். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பாம்பு பிடி வீரரால் பிடிபட்ட நாகம், அரியவகை பொறி நாகம். இது மிகவும் கொடிய விஷத்தன்மை கொண்டது, என்றனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...