பல்லடம் அருகே திருமண அலங்கார பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு!

பல்லடம் அருகே வே.கள்ளிப்பாளையத்தில் ஊருக்கு நடுவே இயங்கும் திருமண அலங்கார பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தால் கடும் பாதிப்பு ஏற்படுவதாகவும், நிறுவனத்தை அப்புறப்படுத்த கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



திருப்பூர்: பல்லடம் அருகே திருமண அலங்கார பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை அப்புறப்படுத்த கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வே.கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி.



இவருக்கு இரண்டு மகன்களில், சம்பத்குமார் என்பவர் மூளை வளர்ச்சி குன்றியவர் என்பதால் வீட்டிலேயே உள்ளார்.



இவரது வீட்டிற்கு அருகில் சீமான் என்பவர் கண்ணாடி துகள்களை பயன்படுத்தி திருமண அலங்கார பொருட்கள் தயார் செய்யும் கம்பெனி நடத்தி வருவதால், தனது மகனுக்கும், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் சுவாசக் கோளாறு, தோல் வியாதிகள் ஏற்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கடந்த நான்கு மாதங்களாக மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவரிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், குடியிருப்பு பகுதிக்கு தொழில் செய்ய எந்தவித அனுமதியும் பெறாமல் சட்ட விரோதமாக இயங்கி வரும் இந்த நிறுவனத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...