வால்பாறை அருகே இறந்தநிலையில் ஆண்யானை மீட்பு - உடற்கூறு ஆய்வில் புதிய தகவல்!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே வனபகுதியில் இறந்த நிலையில் ஆண்யானையின் உடலை வனத்துறையினர் மீட்டுள்ளனர். கால்நடை மருத்துவர்கள் நடத்திய உடற்கூறு ஆய்வில், யானைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு பள்ளத்தில் விழுந்து இறந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.


வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே இறந்த நிலையில் ஆண் யானை மீட்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகேபூனாச்சி செட்டில்மென்ட் வன பகுதியில் ஆண் யானை இறந்து கிடந்தது. வனத்துறையினர் ரோந்து பணி சென்றபோது,யானை இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



இறந்து பல நாட்களான நிலையில் கிடந்த யானையின் உடலை,ஆனைமலை புலிகள் காப்பகம்கால்நடை மருத்துவர் விஜயராகவன் மற்றும் மருதுவ குலு, ACF செல்வன், வால்பாறை வனச்சரக அலுவலர்அகியோர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்தனர்.அப்போது, யானையின் தந்தம் பாதுகாப்பாக எடுக்கப்பட்டது.



உடற்கூறு ஆய்வின் அடிப்படையில், இறந்த யானை மற்றொரு யானையுடன் சண்டையிட்டு ஒரு பள்ளத்தில் விழுந்து இறந்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.யானை வேட்டையாடப்பட்டிருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும்,இறந்த யானை சுமார் 37-42 வயது இருக்கும் என்றும்,உடற்கூறு ஆய்வு முடிந்து சடலம் இயற்கையான சிதைவுக்காகவும் (decompose), மற்ற உயிரினங்களுக்கு உணவாகும் வகையில்விடப்படுவதாகவும் வனத்துறையினர் கூறியுள்ளனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...