வால்பாறை அருகே இறந்தநிலையில் ஆண்யானை மீட்பு - உடற்கூறு ஆய்வில் புதிய தகவல்!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே வனபகுதியில் இறந்த நிலையில் ஆண்யானையின் உடலை வனத்துறையினர் மீட்டுள்ளனர். கால்நடை மருத்துவர்கள் நடத்திய உடற்கூறு ஆய்வில், யானைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு பள்ளத்தில் விழுந்து இறந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.


வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே இறந்த நிலையில் ஆண் யானை மீட்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகேபூனாச்சி செட்டில்மென்ட் வன பகுதியில் ஆண் யானை இறந்து கிடந்தது. வனத்துறையினர் ரோந்து பணி சென்றபோது,யானை இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



இறந்து பல நாட்களான நிலையில் கிடந்த யானையின் உடலை,ஆனைமலை புலிகள் காப்பகம்கால்நடை மருத்துவர் விஜயராகவன் மற்றும் மருதுவ குலு, ACF செல்வன், வால்பாறை வனச்சரக அலுவலர்அகியோர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்தனர்.அப்போது, யானையின் தந்தம் பாதுகாப்பாக எடுக்கப்பட்டது.



உடற்கூறு ஆய்வின் அடிப்படையில், இறந்த யானை மற்றொரு யானையுடன் சண்டையிட்டு ஒரு பள்ளத்தில் விழுந்து இறந்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.யானை வேட்டையாடப்பட்டிருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும்,இறந்த யானை சுமார் 37-42 வயது இருக்கும் என்றும்,உடற்கூறு ஆய்வு முடிந்து சடலம் இயற்கையான சிதைவுக்காகவும் (decompose), மற்ற உயிரினங்களுக்கு உணவாகும் வகையில்விடப்படுவதாகவும் வனத்துறையினர் கூறியுள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை கணேசபுரம் பள்ளி கட்டுமானத்தை மேயர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் கணேசபுரம் பகுதியில் ரூ.95 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் பள...

கோவை பீளமேடு பகுதியில் மழைநீர் வடிகால், சாக்கடை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் ரூ.10 லட்சம் மழைநீர் வடிகால் பணி, சாக்கடை அடைப்பு சரிசெய்தல், குப்பை சேகரிப்பு, மரக்குப...

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக் கடன் சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.15,000 வங்கிக் கடன் வழங்க ஆகஸ்ட் 24 முதல் 29 வரை பிரதான அலுவலகம் மற்றும்...

ஓணம் பண்டிகை: பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பெங்களூரு SMVT மற்றும் திருவனந்தபுரம் வட...