வால்பாறை அருகே இறந்தநிலையில் ஆண்யானை மீட்பு - உடற்கூறு ஆய்வில் புதிய தகவல்!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே வனபகுதியில் இறந்த நிலையில் ஆண்யானையின் உடலை வனத்துறையினர் மீட்டுள்ளனர். கால்நடை மருத்துவர்கள் நடத்திய உடற்கூறு ஆய்வில், யானைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு பள்ளத்தில் விழுந்து இறந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.


வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே இறந்த நிலையில் ஆண் யானை மீட்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகேபூனாச்சி செட்டில்மென்ட் வன பகுதியில் ஆண் யானை இறந்து கிடந்தது. வனத்துறையினர் ரோந்து பணி சென்றபோது,யானை இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



இறந்து பல நாட்களான நிலையில் கிடந்த யானையின் உடலை,ஆனைமலை புலிகள் காப்பகம்கால்நடை மருத்துவர் விஜயராகவன் மற்றும் மருதுவ குலு, ACF செல்வன், வால்பாறை வனச்சரக அலுவலர்அகியோர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்தனர்.அப்போது, யானையின் தந்தம் பாதுகாப்பாக எடுக்கப்பட்டது.



உடற்கூறு ஆய்வின் அடிப்படையில், இறந்த யானை மற்றொரு யானையுடன் சண்டையிட்டு ஒரு பள்ளத்தில் விழுந்து இறந்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.யானை வேட்டையாடப்பட்டிருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும்,இறந்த யானை சுமார் 37-42 வயது இருக்கும் என்றும்,உடற்கூறு ஆய்வு முடிந்து சடலம் இயற்கையான சிதைவுக்காகவும் (decompose), மற்ற உயிரினங்களுக்கு உணவாகும் வகையில்விடப்படுவதாகவும் வனத்துறையினர் கூறியுள்ளனர்.

Newsletter

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...