மா சாகுபடியில் பூ உதிர்தல் அதிகரிப்பு - கவலையில் உடுமலை விவசாயிகள்!

நடப்பாண்டில் கோடை வெயில் முன்னதாகவே துவங்கி வாட்டி வரும் சூழலில் உடுமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாமரங்களில் இருந்து, பூக்கள் மற்றும் பிஞ்சு உதிர்தல் அதிகரித்து வருவதால் கடந்தாண்டை விட சாகுபடி குறையும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே மா சாகுபடியில் பூ உதிர்தல் அதிகரித்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களில், மா சாகுபடி அதிகளவு உள்ளது.

மானுப்பட்டி, ஜல்லிபட்டி, கொங்கு ரார்குட்டை, தளி, பொன்னாலம்மன்சோலை, ராவணாபுரம் உட்பட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில், மானாவாரியாகவும், இறவையாகவும், பல்வேறு ரக மாமரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இப்பகுதியில் ஆண்டுக்கு இரண்டு சீசன்களில், மாங்காய் உற்பத்தி இருக்கும். அதில், சித்திரை பட்டம் எனப்படும் கோடைகால சீசனே அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.



இந்த நிலையில் நடப்பாண்டு கோடை வெயில் முன்னதாகவே துவங்கி, கொளுத்தி வருவதால், மா சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பம் உட்பட காலநிலை மாற்றங்களால், மாமரங்களில் இருந்து, பூக்கள் மற்றும் பிஞ்சு உதிர்தல் அதிகரித்துள்ளது. மேலும் நோய் தாக்குதலும் பரவலாக உள்ளது.

கிணற்று பாசன விளை நிலங்களில், சொட்டு நீர் மூலமாக தண்ணீர் பாய்ச்சினாலும், மரங்களில் ஏற்படும் பிரச்னைகள் தொடர்கதையாக உள்ளது.

இதனிடையே மாங்காய் நல்ல திரட்சியாகும் முன்பே, வெம்பி, கீழே விழுவதும் அதிகரித்து வருகிறது. இதனால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Newsletter

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...