மா சாகுபடியில் பூ உதிர்தல் அதிகரிப்பு - கவலையில் உடுமலை விவசாயிகள்!

நடப்பாண்டில் கோடை வெயில் முன்னதாகவே துவங்கி வாட்டி வரும் சூழலில் உடுமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாமரங்களில் இருந்து, பூக்கள் மற்றும் பிஞ்சு உதிர்தல் அதிகரித்து வருவதால் கடந்தாண்டை விட சாகுபடி குறையும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே மா சாகுபடியில் பூ உதிர்தல் அதிகரித்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களில், மா சாகுபடி அதிகளவு உள்ளது.

மானுப்பட்டி, ஜல்லிபட்டி, கொங்கு ரார்குட்டை, தளி, பொன்னாலம்மன்சோலை, ராவணாபுரம் உட்பட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில், மானாவாரியாகவும், இறவையாகவும், பல்வேறு ரக மாமரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இப்பகுதியில் ஆண்டுக்கு இரண்டு சீசன்களில், மாங்காய் உற்பத்தி இருக்கும். அதில், சித்திரை பட்டம் எனப்படும் கோடைகால சீசனே அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.



இந்த நிலையில் நடப்பாண்டு கோடை வெயில் முன்னதாகவே துவங்கி, கொளுத்தி வருவதால், மா சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பம் உட்பட காலநிலை மாற்றங்களால், மாமரங்களில் இருந்து, பூக்கள் மற்றும் பிஞ்சு உதிர்தல் அதிகரித்துள்ளது. மேலும் நோய் தாக்குதலும் பரவலாக உள்ளது.

கிணற்று பாசன விளை நிலங்களில், சொட்டு நீர் மூலமாக தண்ணீர் பாய்ச்சினாலும், மரங்களில் ஏற்படும் பிரச்னைகள் தொடர்கதையாக உள்ளது.

இதனிடையே மாங்காய் நல்ல திரட்சியாகும் முன்பே, வெம்பி, கீழே விழுவதும் அதிகரித்து வருகிறது. இதனால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...