பழனி தீர்த்தக்காவடி பக்தர்களுக்கு பாதபூஜை - கவுண்டம்பாளையம் கிராம மக்கள் உற்சாக வரவேற்பு!

ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து பழனிக்கு தீர்த்தக்காவடி எடுத்துக்கொண்டு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பல்லடம் அருகே கவுண்டம்பாளையம் கிராமத்தில் மேளதாளங்கள் முழங்க, வானவேடிக்கையோடு பாத பூஜை செய்து பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.



பல்லடம்: பழனி தீர்த்தக்காவடி பக்தர்களுக்கு பாதபூஜை செய்து கவுண்டம்பாளையம் கிராம மக்கள் வரவேற்பு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து பன்னிரண்டார் தீர்த்தக்காவடி குழுவின் சார்பில்114 தீர்த்தக் காவடியுடன் 11 நாட்கள் பாதயாத்திரையாக பெருந்துறை, ஊத்துக்குளி வழியாக பல்லடம் அருகே கவுண்டம்பாளையம் கிராமத்திற்கு வந்தடைந்தனர். தீர்த்த காவடி உடன் பாதயாத்திரை வந்த பக்தர்களுக்கு கவுண்டம்பாளையம் ஊர் மக்கள், மேளதாளங்கள் முழங்க, வான வேடிக்கைகளுடன் பாத பூஜை செய்து வரவேற்பு அளித்தனர்.



கவுண்டம்பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோவில் வரை கோமாளி வேடமணிந்து, நடனம் ஆடியபடி பக்தர்களை ஊர்மக்கள் அழைத்துச் சென்றனர். இரவு மாகாளியம்மன் கோவிலில் தீர்த்த காவடிகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டது. ஓய்வுக்காக கவுண்டம்பாளையம் கிராமத்தில் உள்ள கோவில் வளாகத்தில் இரவு தங்கினர்.



இன்று மீண்டும் தீர்த்தக்காவடிகளுடன் தாராபுரம் வழியாக சித்திரை 1ஆம் தேதி பழனி முருகன் கோவிலை சென்றடையும்படி பாதயாத்திரையை பக்தர்கள் தொடங்கினர். 114 தீர்த்தக்காவடியுடன் பக்தர்கள் வரிசையாக பாதயாத்திரை வந்த நிகழ்வு காண்போரின் கண்களை கவர்ந்தது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...