பழனி தீர்த்தக்காவடி பக்தர்களுக்கு பாதபூஜை - கவுண்டம்பாளையம் கிராம மக்கள் உற்சாக வரவேற்பு!

ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து பழனிக்கு தீர்த்தக்காவடி எடுத்துக்கொண்டு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பல்லடம் அருகே கவுண்டம்பாளையம் கிராமத்தில் மேளதாளங்கள் முழங்க, வானவேடிக்கையோடு பாத பூஜை செய்து பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.



பல்லடம்: பழனி தீர்த்தக்காவடி பக்தர்களுக்கு பாதபூஜை செய்து கவுண்டம்பாளையம் கிராம மக்கள் வரவேற்பு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து பன்னிரண்டார் தீர்த்தக்காவடி குழுவின் சார்பில்114 தீர்த்தக் காவடியுடன் 11 நாட்கள் பாதயாத்திரையாக பெருந்துறை, ஊத்துக்குளி வழியாக பல்லடம் அருகே கவுண்டம்பாளையம் கிராமத்திற்கு வந்தடைந்தனர். தீர்த்த காவடி உடன் பாதயாத்திரை வந்த பக்தர்களுக்கு கவுண்டம்பாளையம் ஊர் மக்கள், மேளதாளங்கள் முழங்க, வான வேடிக்கைகளுடன் பாத பூஜை செய்து வரவேற்பு அளித்தனர்.



கவுண்டம்பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோவில் வரை கோமாளி வேடமணிந்து, நடனம் ஆடியபடி பக்தர்களை ஊர்மக்கள் அழைத்துச் சென்றனர். இரவு மாகாளியம்மன் கோவிலில் தீர்த்த காவடிகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டது. ஓய்வுக்காக கவுண்டம்பாளையம் கிராமத்தில் உள்ள கோவில் வளாகத்தில் இரவு தங்கினர்.



இன்று மீண்டும் தீர்த்தக்காவடிகளுடன் தாராபுரம் வழியாக சித்திரை 1ஆம் தேதி பழனி முருகன் கோவிலை சென்றடையும்படி பாதயாத்திரையை பக்தர்கள் தொடங்கினர். 114 தீர்த்தக்காவடியுடன் பக்தர்கள் வரிசையாக பாதயாத்திரை வந்த நிகழ்வு காண்போரின் கண்களை கவர்ந்தது.

Newsletter

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...