உடுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூலாங்கிணறு பகுதியை சேர்ந்த பஞ்சலிங்கம் என்பவரின் வீட்டில் நுழைந்து, 6 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து உடுமலை போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


திருப்பூர்: உடுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிச் சென்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பூலாங்கிணறு பகுதியைச் சேர்ந்த அய்யாவு என்பவரது மகன் பஞ்சலிங்கம் (வயது 58). மில் தொழிலாளி. இவருடைய மனைவி பாலக்காட்டிலுள்ள மகள் வீட்டுக்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில் பஞ்சலிங்கம் தனியாக வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று இரவுப் பணிக்காக இரவு 9.30 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு மில்லுக்கு சென்றார்.

பின்னர் வேலை முடிந்து மறுநாள் காலை 6 மணி அளவில் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் முன் பக்க கதவில் இருந்த தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்தது. இதனால் பதற்றமடைந்த பஞ்சலிங்கம், உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அறையில் சிதறிக்கிடந்தன.

மேலும், பீரோவில் வைத்திருந்த 6 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்த பஞ்சலிங்கம், குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர் சம்பவம் குறித்து பஞ்சலிங்கம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த உடுமலை போலீசார் மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர். மேலும் அந்த பகுதிக்கு அருகில் உள்ள கண்காணிப்புக் கேமராக்கள் மற்றும் புதிய நபர்கள் நடமாட்டம் ஆகியவை குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...