பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுமுறை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்தப்படும்- பண்டாரு தத்தாத்ரேயா

பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுமுறை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்தும் சட்டம் விரைவில் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கமான சைமா சங்க நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா அலுவவலர்கள் மற்றும் ஊழியர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த தொழில்துறையினர் கலந்து கொண்டு அரசிடம் வைக்கவுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சரிடம் அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தத்தாத்ரேயா கூறுகையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுமுறை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்தும் சட்டத்திற்கு மாநிலங்களவையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது எனவும், இதற்கான மசோதா விரைவில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

காலத்திற்கு ஒவ்வாத 44 தொழிலாளர் நலச்சட்டங்களை 4 சட்டங்களாக ஒருங்கிணைக்கும் சட்ட மசோதா வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறிய அவர், வரவிருக்கும் கூட்டத்தொடரில் சம்பளம், நிறுவனத்துடன் ஒத்துழைப்பு என இரண்டு மசோதாக்களும் அடுத்த கூட்டத்தொடரில் சமூக பாதுகாப்பு மற்றும் வேலை சூழல், உடல்நலன், பணி பாதுகாப்பு ஆகியவை அடங்கிய இரண்டு சட்டங்களும் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

பிரதான் மந்திரி ரோஸ்கார் யோஜனா திட்டம் மூலம் புதிதாக பணியில் இணையும் ஜவுளித்துறை ஊழியர்களுக்கு 12 சதவிகித பி.எப் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் எனக் கூறிய அவர், இது வழக்கமான 8.33 சதவிகிதத்தை விட கூடுதல் என்பதால் ஜவுளித்துறையில் கூடுதல் பணிகள் மற்றும் தொழில்களை உருவாக்க இது உதவும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...