தென்னை வளர்ச்சி வாரிய இணையதளத்தில் தமிழ் - பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் தகவல்!

மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரிய இணையதளத்தில் தமிழ் இணைப்பு 24 மணி நேரத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொள்ளாச்சி எம்.பி. சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். ஹிந்தி உள்ளிட்ட 6 மொழிகளில் மட்டுமே இயங்கி வந்த இணையதளத்தில் 7வது மொழியாக தமிழும் இணைக்கப்பட்டுள்ளது.


கோவை: மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்தின் விண்ணப்பம் மற்றும் இணையதளங்களில் தமிழ் மொழியையும் இணைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்ட 24 மணி நேரத்தில், அது நிறைவேற்றப்பட்டுள்ளதாக பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எம்பி சண்முக சுந்தரம் கூறியதாவது:

மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்தின் விண்ணப்பம் மற்றும் இணையதளங்களில் தமிழ் மொழியை தவிர்த்து ஹிந்தி, மலையாளம், கன்னடா உள்ளிட்ட 6 மொழிகள் மட்டும் இடம்பெற்றிருந்தன.

இதனால், தமிழக விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்தும், தமிழ் மொழியை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி ஏப்ரல் 5-ம் தேதி தென்னை வளர்ச்சி வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு நான் கோரிக்கை கடிதம் அனுப்பியிருந்தேன்.

இதை தொடர்ந்து, 24 மணி நேரத்தில் தமிழ் மொழியை தென்னை வளர்ச்சி வாரியத்தின் இணையதளத்தில் மத்திய அரசு இணைத்துள்ளது. இந்நடவடிக்கை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...