தென்னை வளர்ச்சி வாரிய இணையதளத்தில் தமிழ் - பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் தகவல்!

மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரிய இணையதளத்தில் தமிழ் இணைப்பு 24 மணி நேரத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொள்ளாச்சி எம்.பி. சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். ஹிந்தி உள்ளிட்ட 6 மொழிகளில் மட்டுமே இயங்கி வந்த இணையதளத்தில் 7வது மொழியாக தமிழும் இணைக்கப்பட்டுள்ளது.


கோவை: மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்தின் விண்ணப்பம் மற்றும் இணையதளங்களில் தமிழ் மொழியையும் இணைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்ட 24 மணி நேரத்தில், அது நிறைவேற்றப்பட்டுள்ளதாக பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எம்பி சண்முக சுந்தரம் கூறியதாவது:

மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்தின் விண்ணப்பம் மற்றும் இணையதளங்களில் தமிழ் மொழியை தவிர்த்து ஹிந்தி, மலையாளம், கன்னடா உள்ளிட்ட 6 மொழிகள் மட்டும் இடம்பெற்றிருந்தன.

இதனால், தமிழக விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்தும், தமிழ் மொழியை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி ஏப்ரல் 5-ம் தேதி தென்னை வளர்ச்சி வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு நான் கோரிக்கை கடிதம் அனுப்பியிருந்தேன்.

இதை தொடர்ந்து, 24 மணி நேரத்தில் தமிழ் மொழியை தென்னை வளர்ச்சி வாரியத்தின் இணையதளத்தில் மத்திய அரசு இணைத்துள்ளது. இந்நடவடிக்கை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகர BDDS குழுவினர் மாநில அளவிலான Anti-Sabotage Check போட்டியில் மீண்டும் தங்கப் பதக்கம்

சென்னை ஆவடி R.C.-யில் நடைபெறும் தமிழ்நாடு காவல்துறையின் Anti-Sabotage Check Competition 2026-ல் கோவை மாநகர BDDS குழுவைச்...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...