செயலிகளை உருவாக்கி கோவை மாணவர் சாதனை - நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் விருது வழங்கி கவுரவிப்பு

கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவர் பாரத் கார்த்திக், சமூக வலைதளங்களுக்கான பிரபலமான ஆப்களை உருவாக்கி கம்யூட்டர் துறையில் சாதனை படைத்துள்ளார். அவருக்கு இளம் தொழில்முனைவோர் சாதனையாளர் விருதை நோபல் வேர்ல்ட் ரொக்கார்ட்ஸ் நிறுவனம் வழங்கி பாராட்டுத் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த ஹரி கிருஷ்ணன், ராஜேஸ்வரி தம்பதியின் மகன் பாரத் கார்த்திக்.



இவர் அங்குள்ள பள்ளியொன்றில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயதிலிருந்தே கணினி தொடர்பான துறைகளில் பாரத் கார்த்திக் அதிக ஆர்வம் காட்டினார். அவரது ஆர்வத்தை கவனித்த பெற்றோர் அவருக்கு லேப்டாப் உள்ளிட்ட உபகரணங்களை வாங்கி கொடுத்தனர்.

பள்ளி மாணவரான பாரத் கார்த்திக், தற்போது கோவையில் உள்ள சில கல்லூரிகளில் ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார். தாம் உருவாக்கிய செயலியைப் பற்றிப் பேசிய பாரத் கார்த்திக், இந்த செயலியின் மூலம் பள்ளிகளில் நடைபெறும் வகுப்புகளை பெற்றோரால் நேரடியாகக் கண்காணிக்க முடியும். மாணவர்களின் தேர்வு மற்றும் பிற செயல்பாடுகளையும் இதன் மூலம் எளிதாகக் கண்காணிக்க முடியும், என்றார்.

இளம் வயதிலேயே பாரத் உருவாக்கிய அப்ளிகேஷன்கள் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கணினி துறையில் சாதனை படைத்துள்ள அவருக்கு இளம் தொழில்முனைவோர் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் (NWR) அமைப்பின் பிரதிநிதி தியாகு நாகராஜ், மாணவர் பாரத் கார்த்திக்றகு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை அவரது வீட்டிற்கே சென்று வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...