செயலிகளை உருவாக்கி கோவை மாணவர் சாதனை - நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் விருது வழங்கி கவுரவிப்பு

கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவர் பாரத் கார்த்திக், சமூக வலைதளங்களுக்கான பிரபலமான ஆப்களை உருவாக்கி கம்யூட்டர் துறையில் சாதனை படைத்துள்ளார். அவருக்கு இளம் தொழில்முனைவோர் சாதனையாளர் விருதை நோபல் வேர்ல்ட் ரொக்கார்ட்ஸ் நிறுவனம் வழங்கி பாராட்டுத் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த ஹரி கிருஷ்ணன், ராஜேஸ்வரி தம்பதியின் மகன் பாரத் கார்த்திக்.



இவர் அங்குள்ள பள்ளியொன்றில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயதிலிருந்தே கணினி தொடர்பான துறைகளில் பாரத் கார்த்திக் அதிக ஆர்வம் காட்டினார். அவரது ஆர்வத்தை கவனித்த பெற்றோர் அவருக்கு லேப்டாப் உள்ளிட்ட உபகரணங்களை வாங்கி கொடுத்தனர்.

பள்ளி மாணவரான பாரத் கார்த்திக், தற்போது கோவையில் உள்ள சில கல்லூரிகளில் ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார். தாம் உருவாக்கிய செயலியைப் பற்றிப் பேசிய பாரத் கார்த்திக், இந்த செயலியின் மூலம் பள்ளிகளில் நடைபெறும் வகுப்புகளை பெற்றோரால் நேரடியாகக் கண்காணிக்க முடியும். மாணவர்களின் தேர்வு மற்றும் பிற செயல்பாடுகளையும் இதன் மூலம் எளிதாகக் கண்காணிக்க முடியும், என்றார்.

இளம் வயதிலேயே பாரத் உருவாக்கிய அப்ளிகேஷன்கள் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கணினி துறையில் சாதனை படைத்துள்ள அவருக்கு இளம் தொழில்முனைவோர் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் (NWR) அமைப்பின் பிரதிநிதி தியாகு நாகராஜ், மாணவர் பாரத் கார்த்திக்றகு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை அவரது வீட்டிற்கே சென்று வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...