செயலிகளை உருவாக்கி கோவை மாணவர் சாதனை - நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் விருது வழங்கி கவுரவிப்பு

கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவர் பாரத் கார்த்திக், சமூக வலைதளங்களுக்கான பிரபலமான ஆப்களை உருவாக்கி கம்யூட்டர் துறையில் சாதனை படைத்துள்ளார். அவருக்கு இளம் தொழில்முனைவோர் சாதனையாளர் விருதை நோபல் வேர்ல்ட் ரொக்கார்ட்ஸ் நிறுவனம் வழங்கி பாராட்டுத் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த ஹரி கிருஷ்ணன், ராஜேஸ்வரி தம்பதியின் மகன் பாரத் கார்த்திக்.



இவர் அங்குள்ள பள்ளியொன்றில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயதிலிருந்தே கணினி தொடர்பான துறைகளில் பாரத் கார்த்திக் அதிக ஆர்வம் காட்டினார். அவரது ஆர்வத்தை கவனித்த பெற்றோர் அவருக்கு லேப்டாப் உள்ளிட்ட உபகரணங்களை வாங்கி கொடுத்தனர்.

பள்ளி மாணவரான பாரத் கார்த்திக், தற்போது கோவையில் உள்ள சில கல்லூரிகளில் ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார். தாம் உருவாக்கிய செயலியைப் பற்றிப் பேசிய பாரத் கார்த்திக், இந்த செயலியின் மூலம் பள்ளிகளில் நடைபெறும் வகுப்புகளை பெற்றோரால் நேரடியாகக் கண்காணிக்க முடியும். மாணவர்களின் தேர்வு மற்றும் பிற செயல்பாடுகளையும் இதன் மூலம் எளிதாகக் கண்காணிக்க முடியும், என்றார்.

இளம் வயதிலேயே பாரத் உருவாக்கிய அப்ளிகேஷன்கள் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கணினி துறையில் சாதனை படைத்துள்ள அவருக்கு இளம் தொழில்முனைவோர் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் (NWR) அமைப்பின் பிரதிநிதி தியாகு நாகராஜ், மாணவர் பாரத் கார்த்திக்றகு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை அவரது வீட்டிற்கே சென்று வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

Newsletter

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...